பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1466 

2598 இளமையங் கழனிச் சாய
  லேருழு தெரிபொன்வேலி
வளைமுயங் குருவ மென்றோள்
  வரம்புபோய் வனப்புவித்திக்
கிளைநரம்பிசையுங் கூத்துங்
  கேழ்த்தெழுந் தீன்றகாம
விளைபய னினிதிற் றுய்த்து
  வீணைவேந் துறையுமாதோ.

   (இ - ள்.) எரிபொன் வேலி - ஒளிரும் பூணாகிய வேலி சூழ்ந்த; இளைமை அம் கழனி இளமையாகிய கழனியிலே; சாயல் ஏர் உழுது - தன் சாயலாகிய ஏராலே உழுது; வளை முயங்கு உருவம் மென்தோள் வரம்புபோய் - வளை பொருந்திய அழகிய மென்தோளாகிய வரம்பு சூழ்போகச் செய்து; வனப்பு வித்தி - தன் வனப்பை விதைத்தலால்; கிளை நரம்பு இசையும் கூத்தும் கேழ்த்தது எழுந்து ஈன்ற - கிளை நரம்புகளை யாழிசையும் கூத்துமாக நிறங்கொண்டெழுந்து ஈன்ற; காம விளைபயன் - பின்பு ஈன்ற காமமாகிய வினைவின் பயனை; வீணை வேந்து உறையும் - யாழ் வால்லோன்ஒழுகினான்.

   (வி - ம்.) தனது சாயலால் விளைந்த அழகைக் கண்ட அளவில் காமவேட்கை விளைவித்தற்குக் கூத்தையும் பாட்டையும் நடத்துதலின் பிறந்தது காமம் என்க.

( 221 )

இலக்கணையார் இலம்பகம் முற்றிற்று.