விசயை தனக்குதவியாகத் தன்னோடு வந்த தவமகளிர்க்குக் கைம்மாறாகத் தன் பூசனைப் பயனையெல்லாம் ஈந்தனள். ஈமப் புறங்காட்டில் சண்பகமாலை என்னும் தோழியுருக்கொண்டு வந்து தனக்கப் பேருதவி செய்த தெய்வத்திற்குப் அப்புறங்காட்டில் கோயிலெடுத்து விழாக்கொண்டாடச் செய்தனள். சீவகன் பிறந்த இடத்தை அறக்கோட்டமாக்கினள். சுநந்தை விசயையைக் கண்டு தொழுதனள். அவளைப் ”பீடார் பெருஞ் சிறுவற் பயந்தீர் வம்மின்” என்று விசயை மகிழ்ந்து வரவேற்றாள். தேவியரெண்மரும் முதலிய தேயிரெண்மரும் விசயை திருவடியில் வீழ்ந்து வணங்கினர். அவரை விசையை மனமுவந்து வாழ்த்தினள்.
|