அம்மக்கட்கு நிரலே சச்சந்தன், சுதஞ்சணன், தரணி கந்துக்கடன், விசயன், தத்தன், பரதன், கோவிந்தன் எனப் பெயரிடப்பட்டது. அம் மக்களெல்லாம் கலைபயின்று சிறந்தனர்; சீவகன் முப்பதாண்டகவை யுடையனாயினன்.
|
சாரணர் மெய்ம்மொழி கேட்ட சீவகன் தனது பழம்பிறப்பு வரலாற்றினை உணர்த்தும்படி வேண்டினன். சாரணரும் சீவகன் பழம்பிறப்பில் அசோதரனாகத் தோன்றினமையும், மனைவியர் பொருட்டு அன்னப் பார்ப்பினைப் பிடித்துக் கூட்டில் அடைத்து வைத்தமையும் அப்பிறப்பிற் றவஞ் செய்து இந்திரனாயதும், பின்னர் இப்பிறப்புற்றதும் அன்னப் பார்ப்பைச் சிறையிட்டமை யால் இப் பிறப்பிற் பற்றலராற் பற்றப்பட்டமையும் விளக்கிச் சென்றனர்.
|