| முத்தி இலம்பகம் |
1477 |
|
|
| 2611 |
பேருணர் வுடைய நீரா | |
| |
ரண்ணலைத் தெருட்ட றேற்றா | |
| |
தமைச்சரு மகன்று விட்டார். | |
| |
|
|
(இ - ள்.) நுண்மதி போன்று தோன்றா நுணுகிய நுசுப்பினார்தம் - நுண்ணறிவு போல வெளிப்படையாகத் தெரியாத சிற்றிடையாரின்; கண்வலைப் பட்ட போழ்தே - கண்ணாகிய வலையிற் பட்டபொழுதே; கடுநவை அரவோடு ஒக்கும் பெண்மையை - கொடிய குற்றத்தையுடைய பாம்பைப்போலுற்ற பெண்மையை; பேர் உணர்வு உடைய நீரார் பெண்மை என்னார் - பேரறிவுடைய பண்பினார் பெண்மை எனக் கூறார் (ஆகையினால்); அண்ணலைத் தெருட்டல் தேற்றாது - அரசனைத் தெருட்டவும் தெளியாமல்; அமைச்சரும் அகன்றுவிட்டார் - அமைச்சரும் நீங்கிவிட்டனர்.
|
|
(வி - ம்.) நுண்மதி - நுண்ணறிவு - அறிவு அருவப் பொருளாகலின் இங்ஙனம் உவமையாக எடுத்தார். கண்வலை : பண்புத்தொகை. கடுநவை - கொடிய குற்றஞ்செய்தலையுடைய. அரவு பெண்மைக்குவமை. அண்ணல்; சச்சந்தன்.
|
( 13 ) |
| 2612 |
கற்சிறை யழித்து வெள்ளங் | |
| |
கடற்கவா யாங்குக் கற்றோர் | |
| |
சொற்சிறை யழித்து வேந்தன் | |
| |
றுணைமுலை துறத்தல் செல்லான் | |
| |
விற்சிறை கொண்ட போலும் | |
| |
புருவத்து விளங்கு வேற்க | |
| |
ணற்சிறைப் பட்டுநாடு நகரமுங் | |
| |
காவல் விட்டான். | |
|
|
(இ - ள்.) கல் சிறை அழித்து வெள்ளம் கடற்கு அவாய் ஆங்கு - கல்லாகிய அணையை அழித்து வெள்ளம் கடலை விரும்பிச் சென்றாற்போல; வேந்தன் - அரசன்; கற்றோர் சொல் சிறை அழித்து - கற்ற அமைச்சரின் சொல்லாகிய காவலை அழித்து; துணைமுலை துறத்தல் செல்லான் - இருமுலைகளின் இன்பத்தை விட்டு நீங்கானாகி; வில் சிறை கொண்டபோலும் புருவத்து விளங்கு வேற்கண் நல்சிறைப்பட்டு - வில்லைச் சிறைப்படுத்தினாற்போன்ற புருவத்தின்கீழ் விளங்கும் வேல் போன்ற கண்ணாகிய தப்பாத சிறையிலே அகப்பட்டு; நாடும் நகரமும் காவல் விட்டான் - நாட்டையும் நகரத்தையும் காப்பது ஒழிந்தான்.
|