நாமகள் இலம்பகம் |
149 |
|
272 |
உரிமைமுன் போக்கி யல்லா |
|
லொளியுடை மன்னர் போகார் |
|
கருமமீ தெனக்கு மூர்தி |
|
சமைந்தது கவல வேண்டா |
|
புரிநரம் பிரங்குஞ் சொல்லாய் |
|
போவதே பொருள்மற் றென்றா |
|
னெரிமுயங் கிலங்கு வாட்கை |
|
யேற்றிளஞ் சிங்க மன்னான். |
|
(இ - ள்.) எரிமுயங்கு இலங்கு வாள்கை இளஞ்சிங்க ஏறு அன்னான் - எரியில் தோய்ந்து விளங்கும் வாளேந்திய கையனான, ஆணிளஞ்சிங்கம் போன்றவன்; புரிநரம்பு இரங்கும் சொல்லாய் - முறுக்கப்பெற்ற நரம்பிலெழும் பண்ணும் வருந்தும் இனிய சொல்லினாய்; ஒளிஉடை மன்னர் உரிமைமுன் போக்கி அல்லால் போகார் - புகழுறும் வேந்தர்கள் தம் உரிமை மகளிரை முன்னே போக்கியல்லது தாம் போகார்; எனக்கும் கருமம் ஈது - (ஆகவே) எனக்கும் இப்பொழுது இசைந்த காரியம் இதுவே; ஊர்தி சமைந்தது - ஆகூழானே ஓர் ஊர்தியும் அமைந்துவிட்டது; கவலவேண்டா - இனி வருந்தவேண்டா; போவதே பொருள் என்றான் - (ஆகையால்) நீ முன்னர் ஏகுவது செய்யத்தக்கது என்றான்.
|
|
(வி - ம்.) பிள்ளையாற் கதி பெறுதலும் பகை வெல்வதுங் கருதி இருவர்க்கும் கருமம் என்றான். கவலுதல்: இருதலைக் கொள்ளி எறும்பு போற் கணவனையும் மகனையும் எண்ணி வருந்துதல். கவலை : இருபாற்பட்டது.
|
|
எனக்கும் கருமம் ஈது என மாறுக. ஊர்தியும் சமைந்தது எனல் வேண்டிய உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.
|
|
ஆகூழ் உண்மையால் ஊர்தியும் சமைந்துளது என்றவாறு. ஊர்தி என்றது மயிற்பொறியை. எனக்கும் கருமம் ஈது என்றது நின்னைப் போக்குவதே என்றவாறு. நினக்கும் போவதே கருமம் என்க.
|
( 243 ) |
273 |
என்புநெக் குருகி யுள்ள |
|
மொழுகுபு சோர யாத்த |
|
வன்புமிக் கவலித் தாற்றா |
|
வாருயிர்க் கிழத்தி தன்னை |
|
யின்பமிக் குடைய சீர்த்தி |
|
யிறைவன தாணை கூறித் |
|
துன்பமில் பறவை யூர்தி |
|
சோ்த்தினன் துணைவி சோ்ந்தாள். |
|