பக்கம் எண் :

                     
முத்தி இலம்பகம் 1494 

இந் நகரினுள்ளே உறைக என - அடிகள் சில நாட்கள் இந்த நகரிலே உறைக என்று; அண்ணல் கூற - சீவகன் வேண்ட; முடிகெழு மன்னற்கு ஒன்றும் மறுமொழி கொடாது - முடியுடைய வேந்தனுக்கு யாதும் விடை கூறாமல்; படிமம் போன்று தேவி இருப்ப - பாவை போன்று விசயை இருந்தாளாக; பம்மை நோக்கிச் சொல்லினாள் - பம்மை அந்நிலையை நோக்கிக் கூறினாள்.

 

   (வி - ம்.) கடியவை - தீவினை. அடிகள் என்றது விசயையை. அண்ணல் : சீவகன். மன்னன், சுட்டுப்பொருள் மேனின்றது. தேவி : விசயை. படிமம் - பதுமை.

( 44 )
2643 காதல னல்லை நீயுங் காவல நினக்கி யாமு
மேதில மென்று கண்டா யிருந்தது நங்கை யென்னத்
தாதலர் தாம மார்ப னுரிமையுந் தானு மாதோ
போதவிழ் கண்ணி யீர்த்துப் புனல்வரப் புலம்பி னானே.

   (இ - ள்.) காவல - மன்னனே!; நீயும் காதலன் அல்லை - நீயும் எம்மால் விருப்பப்படுவாய் அல்லை; நினைக்கு யாமும் ஏதிலம் என்று - நினக்கு யாமும் சுற்றம் அல்லேம் என்று; நங்கை இருந்தது என்ன - விசயை உரையின்றியிருந்தது என்ன; தாது அலர் தாம மார்பன் - தேன் விரியும் மலர்மாலை மார்பனான சீவகன்; உரிமையும் தானும் போது அவிழ் கண்ணி ஈர்த்து - மனைவியருந் தானுமாக அரும்பலர்ந்த கண்ணியை இழுத்து; புனல்வரப் புலம்பினான் - கண்ணீர் வர அழுதான்.

 

   (வி - ம்.) ”காதலன் அல்லைநீயும் காவல நினக்கு யாமும் ஏதிலம்” என்னுமளவும் பம்மை விசயையின் கருத்தைக்கொண்டு கூறியபடியாம். தாது - மகரந்தம். உரிமை - மனைவியர். மாதும் ஓவும் அசைகள்.

( 45 )
2644 ஏதில னாயி னாலு
  மிறைவர்தம் மறத்தை நோக்கக்
காதல னடிக ளென்னக்
  கண்கனிந் துருகிக் காசின்
மாதவ மகளி ரெல்லா
  மாபெருந் தேவி யாரை
யேதமொன் றில்லை நம்பிக்
  கின்னுரை கொடுமி னென்றார்.

   (இ - ள்.) அடிகள் - அடிகளே!; ஏதிலன் ஆயினாலும் இறைவர்தம் அறத்தை நோக்க - யான் தேவிக்குச் சுற்றம் அன்றேனும், இறைவர் அறத்தைத் துணிந்து நிற்கின்ற நிலையை