முத்தி இலம்பகம் |
1497 |
|
|
விரும்பி இருப்பேனெனின்; எனக்குப் பழி என்று ஒழியும்? - எனக்குப் பிறக்கும் பழி எப்போது நீங்கும்?; என இலங்கு செம்பொன் குன்றனான் குளிர்ப்பக் கூறி - என்று விளங்கும் பொன் மலை போன்ற அவன் மனங்குளிர உரைத்து; கோயில் புக்கு அருளுக என்றாள் - இனி அரண்மனைக்குப் போய் உலகைக் காத்தருள்க என்றாள்.
|
|
(வி - ம்.) கணவன் இறக்கவும் புதல்வன் அரசை உவந்திருந்தாளென்ற பழி நேர்ந்தது போக என்பாள், 'சென்றதோ செல்க' என்றாள்.
|
|
2648 |
பந்தட்ட விலலி னார்தம் | |
|
படாமுலை கிழித்த பைந்தார் | |
|
நந்தட்டன் றன்னை நோக்கி | |
|
நங்கையா ரடிகள் சொன்னார் | |
|
நொந்திட்டு முனிய வேண்டா | |
|
துறந்தில நும்மை யென்னக் | |
|
கந்தட்ட திணிதிண் டோளான் | |
|
கற்பக மலர்ந்த தொத்தான். | |
|
(இ - ள்.) பந்து அட்ட விரலினார்தம் - பந்தை வருத்தின விரலையுடைய மகளிரின்; படாமுலை கிழித்த பைந்தார் நந்தட்டன் தன்னை நோக்கி - சாயாத முலைகள் கிழித்த மாலையணிந்த நந்தட்டனைப்பார்த்து; நங்கையர் அடிகள் சொன்னார் - விசயமா தேவியார் கூறினார்; நும்மைத் துறந்திலம் - உம்மை யாம் நீக்கிலம்; நொந்திட்டு முனிய வேண்டா என்ன - (ஆதலால்) வருந்தி வெறுத்தல் வேண்டா என்றுரைக்க; கந்து அட்ட திணி திண்தோளாளன் கற்பகம் மலர்ந்தது ஒத்தான் - தூணைத் தாக்கிய மிகவும் திண்ணிய தோளான் (நந்தட்டன்) கற்பகம் மலர்ந்ததைப்போல மகிழ்ந்தான்.
|
|
(வி - ம்.) அட்ட - வருத்தின. நங்கையாரடிகள் : விசயை . நொந்திட்டு - நொந்து. முனிய - வெறுக்க. கந்து - தூண். திணிதின்தோள் - மிகவும் திண்ணிய தோள். தோளான் : நந்தட்டன்.
|
( 50 ) |
2649 |
துறந்த விந்நங்கை மார்தந் | |
|
தூம லரனைய பாத | |
|
முறைந்தவென் சென்னிப் போதின் | |
|
மிசையவென் றொப்ப வேத்திக் | |
|
கறந்தபா லனைய கந்திக் | |
|
கொம்படுத் துருவப் பைம்பூண் | |
|
பிறங்குதார் மார்பன் போந்து | |
|
பெருமணக் கோயில் புக்கான். | |
|