| முத்தி இலம்பகம் | 
1500  | 
 | 
  | 
| 
    (வி - ம்.) உடைதிரை : வினைத்தொகை. ஓசனித்தல் - 'சிறகடித்தல்' என்பர் நச்சினார்க்கினியர். 'வெக்கையால் தலை எடுத்தல்' என்பர் சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர். போதற்கு ஒருப்பட்டு முயறல் என்று அடியார்க்கு நல்லார் உரைகூறி 'உடைதிரை முத்தஞ் சிந்த ஓசனிக்கின்ற அன்னம்' என்றார் சிந்தாமணியினும் என்று இத்தொடரை எடுத்துக் காட்டினர். 
 | 
( 54 ) | 
|  2653 | 
துறவின்பாற் படர்த லஞ்சித் |   |  
|   | 
  தொத்தொளி முத்துத் தாம |   |  
|   | 
முறைகின்ற வுருவக் கோலச் |   |  
|   | 
  சிகழிகை மகளி ரின்பத் |   |  
|   | 
திறைவனை மகிழ்ச்சி செய்து |   |  
|   | 
  மயங்குவா னமைச்ச ரெண்ணி |   |  
|   | 
நிறையநீர் வாவி சாந்தங் |   |  
|   | 
  கலந்துடன் பூரித் தாரே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) துறவின்பால் படர்தல் அஞ்சி - (அரசன்) துறவிலே மனம் படர்தற்கு அஞ்சி; தொத்து ஒளி முத்துத்தாமம் - கொத்தாகிய ஒளியையுடைய முத்துமாலை; உறைகின்ற உருவக் கோலச் சிகழிகை - தங்கிய அழகிய ஒப்பனை நிறைந்த மயிர் முடியுடைய; மகளிர் இன்பத்து - மகளிரின் இப்பத்திலே; இறைவனை மகிழ்ச்சி செய்து மயக்குவான் - அவனைக் களிப்பூட்டி மயக்குதற்கு; அமைச்சர் எண்ணி - மந்திரிகள் ஆராய்ச்சி செய்து; நீர் வாவி நிறைய சாந்தம் உடன் கலந்து பூரித்தார் - நீர் வாவி நிறையச் சந்தனமும் உடன் கலந்து நிறைத்தார். 
 | 
| 
    (வி - ம்.) இறைவன் துறவின்பால் படர்தல் அஞ்சி அவனை மயக்குவான் அமைச்சர் எண்ணிப் பூரித்தார் என்க. இன்பம் பிறத்தற்கு விளையாட்டும் நிலைக்களனாதலின் முதற்கண் நீர் விளையாட்டிற் சீவகனை ஈடுபடுத்த முய்னறார் என்பதாம். 
 | 
| ”செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று | 
 | 
| அல்லல் நீத்த உவகை நான்கே”. (மெய்ப். - 11) | 
 | 
| 
    என்பது தொல்காப்பியம். மகளிரின்பத்திற்கு நீர் விளையாட்டுக் கால் கோளுமாதலுணர்க. 
 | 
( 55 ) | 
|  2654 | 
நீரணி மாட வாவி |   |  
|   | 
  நோ்ம்புணை நிறைத்து நீணீர்ப் |   |  
|   | 
போரணி மாலை சாந்தம் |   |  
|   | 
  புனைமணிச் சிவிறி சுண்ணம் |   |  
|   | 
 
 
 |