நாமகள் இலம்பகம் |
151 |
|
275 |
முழைமு கத்தி டியரி |
|
வளைத்த வன்ன மள்ளரிற் |
|
குழைமு கப்பு ரிசையுட் |
|
குருசி றான கப்பட |
|
விழைமு கத்தெ றிபடை |
|
யிலங்கு வாட்க டலிடை |
|
மழைமு கத்த குஞ்சரம் |
|
வாரி யுள்வ ளைந்ததே. |
|
(இ - ள்.) முழைமுகத்து இடிஅரி வளைத்த அன்ன - மலையின் குகையிலுள்ள இடியென முழங்கும் சிங்கத்தை வளைத்த யானைத் திரள்போன்ற; மள்ளரில் குழைமுகப் புரிசையுள் குருசில்தான் அகப்பட - வீரர்களிடையே, மகளிர் காக்கும் மதிலில் அரசன் அகப்படுமாறு; இழை முகத்து எறிபடை இலங்கு வாள் கடலிடை - நூல் பிளக்க எறியும் வேற்படை விளங்கும் வாள் வீரராகிய கடலின் நடுவே; மழைமுகத்த குஞ்சரம் வாரியுள் வளைந்த - முகில்போல மதம் ஒழுகும் களிறுகள் (யானை குதிரைகளின்மேல் அமர்ந்து பந்து விளையாடும்) செண்டுவெளியிலே வளைந்தன.
|
|
(வி - ம்.) குழைமுக மகளிர் காக்கும் புரிசையெனவே அந்தப்புரம் ஆயிற்று; ‘ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்‘ (நெடுநல். 107) என்றார் பிறரும். மழை - மதம்.
|
|
அரியை யானை வளைத்தல் இல் பொருளுவமம்.
|
( 246 ) |
276 |
அயிலி னிற்பு னைந்தவா |
|
ளழன்று ருத்து உரீஇயுடன் |
|
பயில்க திர்ப்ப ருமணிப் |
|
பன்ம யிர்ச்செய் கேடகம் |
|
வெயிலே னத்தி ரித்துவிண் |
|
வழுக்கி வந்து வீழ்ந்ததோர் |
|
கயில ணிக்க திர்நகைக் |
|
கடவு ளொத்து லம்பினான். |
|
(இ - ள்.) அயிலினில் புனைந்த வாள் அழன்று உருத்து உெரீஇ - கூர்மையாக அமைத்த வாளை நெஞ்சு புகைந்து சினந்து (உறையினின்றும்) உருவி; உடன்பயில் கதிர்ப் பருமணிப் பன்மயிர்செய் கேடகம் வெயில் எனத் திரிந்து -அதனுடன் ஒளி தவழும் பெரிய மணிகளிழைத்துக் கரடித் தோலாற் செய்யப் பெற்ற கேடகத்தை ஞாயிறெனச் சுழற்றி; விண்வழுக்கி வந்து
|
|