பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1518 

2689 ஏச்செயாச் சிலைநுத லேழை மார்முலைத்
தூச்செயாக் குங்குமந் துதைந்த வண்டினம்
வாய்ச்சியா லிட்டிகை செத்து மாந்தர்தம்
பூச்செயா மேனிபோற் பொலிந்து தோன்றுமே.

   (இ - ள்.) ஏச் செயாச் சிலைநுதல் ஏழைமார் - அம்பை ஏவும் தொழிலைச் செய்யாத வில்போலும் நுதலையுடைய மங்கையரின்; முலைத் தூச்செயாக் குங்குமம் துதைந்த வண்டினம் - முலையிலுள்ள கழுவாத குங்குமத்திலே படிந்த வண்டின் திரள்; வாய்ச்சியால் இட்டிகை செத்தும் மாந்தர்தம் - வாய்ச்சி எனுங் கருவியாலே செங்கல்லைச் செத்தும் மக்களின்; பூச்செயாமேனிபோல் பொலிந்து தோன்றும் - கழுவாத உடம்பைப்போல விளக்கித் தோன்றும்.

   (வி - ம்.) 'வண்டினம் படிதற்குக் காரணமான குங்குமம் மேனி போல் தோன்றும்' என்றும் கூட்டி உரைப்பர் நச்சினார்க்கினியர்.

   ஏ - எய்தற்றொழில். ஏத்தொழில் செய்தற்கு ஏறிட்டும் அத்தொழில் செய்யாத விற்போலும் நுதல். வாய்ச்சி - ஒரு கருவி. இட்டிகை - செங்கல். பூச்செயா - கழுவாத.

( 91 )

இளவேனில்

வேறு

2690 குரவம் பாவை கொப்புளித்துக்
  குளிர்சங் கீர்ந்த துகளேபோன்
மரவம் பாவை வயிறாரப்
  பருகி வாடை யதுநடப்ப
விரவித் தென்றல் விடுதூதா
  வேனி லாற்கு விருந்தேந்தி
வரவு நோக்கி வயாமரங்க
  ளிலையூழ்த் திணா¦ன் றலர்ந்தனவே.

   (இ - ள்.) குளிர்சங்கு ஈர்ந்த துகளேபோல் - குளிர்ந்த சங்கினை அறுத்த தூசிபோல; குரவம் பாவை பொப்புளித்து - குரவு ஈன்ற தேனைக் கொப்புளித்து; மரவம் பாவை வயிறு ஆரப்பருகி - மரவம் தந்த தேனை வயிறு நிறையப் பருகி ; வாடை நடப்ப - வாடை போகாநிற்க; விரவித் தென்றல் விடுதூதுஆ - வாடையுடன் கலந்த தென்றலை விடுகின்ற தூதாகக் கொண்டு; வேனிலாற்கு விருந்து ஏந்தி - காமனுக்கு இடுகின்ற விருந்தை ஏந்தி; வரவு நோக்கி - அவன் வரவை எதிர்பார்த்து; இலை