பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 152 

வீழ்ந்தது கயில்அணிக் கதிர்நகை ஓர் கடவுள் ஒத்து உலம்பினான் - வானிலிருந்து வழுக்கிவந்து வீழ்ந்ததாகிய கதிராகிய மூட்டுவாய் அமைந்த முத்துமாலையையுடைய ஒரு கடவுளைப் போல முழங்கினான்.

 

   (வி - ம்.) நல்வினை கெட்டு வீழ்ந்ததொரு கடவுள் (ஞாயிறு) உவமையாயிற்று, இவனும் துணையும் படையுமின்றி நிற்றலின். கயில் - மூட்டுவாய். நகை - முத்துவடம்.

( 247 )
277 மாரி யிற்க டுங்கணை
  சொரிந்து மள்ள ரார்த்தபின்
வீரி யக்கு ருசிலும்
  விலக்கி வெங்க ணைமழை
வாரி யிற்க டிந்துட
  னகற்ற மற்ற வன்படைப்
பேரி யற்பெ ருங்களிறு
  பின்னி வந்த டைந்தவே.

   (இ - ள்.) மள்ளர் மாரியின் கடுங்கணை சொரிந்து ஆர்த்த பின் - வீரர்கள் மழையெனக் கொடிய அம்புகளைப் பொழிந்து ஆரவாரித்த பிறகு; வீரியக் குருசிலும் வெங்கணை மழை விலக்கி - வீரம் மிகுந்த அரசனும் கொடிய அக் கணைமழையை நீக்கி; வாரியில் உடன் கடிந்து அகற்ற - செண்டு வெளியில் நின்று அப்படைகளைச் சேரக் கெடுத்துப் போக்க; மற்றவன் படைப்பேர் இயல் பெருங்களிறு பின்னி வந்து அடைந்த -வேறாக நின்ற வலிய படையிலுள்ள புகழ்பெற்ற பெரிய களிறுகள் நெருங்கி வந்து குழுமின.

 

   (வி - ம்.) பேர்இயல் பெருங்களிறு - தம்பேர் உலகில் இயலுதலையுடைய பெரிய களிறுகள்.

( 248 )
278 சீற்ற மிக்க மன்னவன்
  சோ்ந்த குஞ்ச ரந்நுதற்
கூற்ற ருங்கு ருதிவாள்
  கோடு றவ ழுத்தலி
னூற்று டைநெ டுவரை
  யுருமு டன்றி டித்தென
மாற்ற ரும்ம தக்களிறு
  மத்த கம்பி ளந்தவே.