பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1520 

   (வி - ம்.) இளி - இளியென்னும் நரம்பு. ”நிலம்பெயர்ந் துறைதல் வரைநிலை யுரைத்தல் - கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய' (தொல். கற்பு. 24) என்பதனாற் கணவரைப் பிரிந்த மகளிரின் மெலிவைப் பாட்டாகக் கொண்டு பாணன் அம் மகளிரின் கணவரிடம் பாடுதல் கொள்க. 'விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும்' (திரி.11) என்றார் பிறரும்.

( 93 )
2692 வேனி லாடும் விருப்பினால்
  வியன்காய் நெல்லிச் சாந்தரைத்து
நான வெண்ணெய் கதுப்புரைத்து
  நறுநீ ராடி யமிர்துயிர்க்குந்
தேனா ரகிலின் புகைசோ்த்தி
  வகுத்து நாவிக் குழம்புறீஇ
யானாப் பளித நறுஞ்சுண்ண
  முகிரி னுழுதாங் கணிந்தாரே.

   (இ - ள்.) வேனில் ஆடும் விருப்பினால் - வேனிலில் விளையாடும் விருப்பதினால்; வியன்காய் நெல்லிச் சாந்து அரைத்து- பெரிய நெல்லிக்காயைச் சாந்தாக அரைத்துக்கொண்டு; நான் எண்ணெய் கதுப்பு உரைத்து - கத்தூரி கலந்த எண்ணெயைக் கூந்தலிலே தேய்த்து; நறுநீராடி - (அச் சாந்தைக் கொண்டு) நல்ல நீரிலே குளித்து; அமிர்து உயிர்க்கும் தேன்ஆர் அகிலின் புகைசேர்த்தி - அமிர்தம் துளிக்கும் தேன் நிறைந்த அகிற்புகையைச் சேர்த்தி; வகுத்து - வகிர்ந்து; நாவிக் குழம்பு உறீஇ - புழுகைத் தடவி; உகிரின் உழுது - நகத்தாலே நீக்கி; ஆனாப் பளித நறுஞ்சுண்ணம் அணிந்தார் - குறைவில்லா நல்ல கருப்பூரப் பொடியை அணிந்தார்.

   (வி - ம்.) வேனில் - வேனிற்காலம். நெல்லிக்காய்ச் சாந்து அரைத்து என்க. நானம் - கத்தூரி. கதுப்பு - கூந்தல். நாவிக்குழம்பு - புழுகுச் சாந்து. பளிதம் - கருப்பூரம். உகிர் - நகம்

( 94 )
2693 முத்தார் மருப்பி னிடைவளைத்த
  முரண்கொள் யானைத் தடக்கையி
னொத்தே ருடைய மல்லிகையி
  னொலியன் மாலை யுறுப்படக்கி
வைத்தார் மணிநூற் றனவைம்பால்
  வளைய முடித்து வான்கழுநீ
ருய்த்தாங் கதனுட் கொளவழுத்திக்
  குவளைச் செவித்தா துறுத்தாரே.