முத்தி இலம்பகம் |
1524 |
|
|
(வி - ம்.) முறுவலின் ஒளி பவளவாயிலே படுதலால், அத்தகைய ஒளியில்லாத கொவ்வைக் கனிகள் தொழுதன.
|
'நாணைத் தன்னுள்ளே யடக்கி நகுகின்ற தாலியைப் பழைய நிலையிலே கிடக்கும்படி, பேணி, சுடர்வீசும் மாணிக்கத்தைக் கழுத்திலே அணிந்து' - என இரண்டணிகள் ஆக்குவர் நச்சினார்க்கினியர்.
|
தோள் : முதனிலை. தோள் கடல் : வினைத்தொகை. தோள்கடல் நீர்க்கடல் என இயைக்க.
|
( 99 ) |
2698 |
மாலை மகளி ரணிந்ததற்பின் | |
|
பஞ்ச வாசங் கவுட்கொண்டு | |
|
சோலை மஞ்ஞைத் தொழுதிபோற் | |
|
றோகை செம்பொ னிலந்திவளக் | |
|
காலிற் சிலம்புங் கிண்கிணியுங் | |
|
கலையு மேங்கக் கதிர்வேலு | |
|
நீலக் குவளை நிரையும்போற் | |
|
கண்ணார் காவி லிருந்தாரே. | |
|
(இ - ள்.) மகளிர் மாலை அணிந்ததன் பின் - (இவ்வாறுஒப்பனைக்குப்பின்) அம் மகளிர் மாலையையும் குறைதீர அணிந்த பிறகு; பஞ்சவாசம் கவுள் கொண்டு - (வெற்றிலையை) ஐந்து வகையான முகவாசத்துடன் வாயிற்கொண்டு; காலில் சிலம்பும் கிண்கிணியும் கலையும் ஏங்க - காலிலே சிலம்பும் கிண்கிணியும் இடையிற் கலையும் ஒலிக்கவும்; தோகை செம்பொன் நிலம் திவள - கொய்சகம் அழகிய நிலத்தே பட்டுத் துவள; கதிர் வேலும் நீலக்குவளை நிரையும்போற் கண்ணார் - ஒளியுறு வேலும் நீல நிறமுடைய குவளை நிரையும் போன்ற கண்ணார் ஆகிய அவர்கள்; சோலை மஞ்ஞைத் தொழுதிபோல காவில் இருந்தார் - சோலையிடையே உள்ள மயிர் திரள்போலக் காவினிடையே இருந்தனர்.
|
(வி - ம்.) மஞ்ஞை - மயில். தொழுதி - கூட்டம். தோகை - கொய்சகம். திவள - துவள. கலை - மேகலை. கா - சோலை.
|
( 100 ) |
2699 |
மணிவண் டொன்றெ நலம்பருக | |
|
மலர்ந்த செந்தா மரைத்தடம்போ | |
|
லணிவேன் மன்ன னலம்பருக | |
|
வலர்ந்த வம்பார் மழைக்கண்ணார் | |
|
பணியார் பண்ணுப் பிடியூர்ந்து | |
|
பரூஉக்காற் செந்நெற் கதிர்சூடித் | |
|
தணியார் கழனி விளையாடித் | |
|
தகைபா ராட்டத் தங்கினார். | |
|