(வி - ம்.) இம்மலர் வடுப்படுத்தி மோந்தும் இனிய நாற்றத்தவே ஆயினாற்போல, எம்மையும் உகிர் முதலியவற்றாற் சிறிது வடுப்படுத்தி நுகர்தல் எமக்கு வருத்தம் என்று அஞ்சினையாயினும், அஃது எமக்கு மிக்க இன்பமேயாதலின், உனக்கும் இன்பஞ் செய்யும் என்று உணர்த்துதற்குக் கிழித்து மோந்தாரென்க. இளமைச் செவ்வி மிக்கவழி மகளிர்க்கு இங்ஙனம் வடுப்படுத்தி நுகர்தல் இன்பஞ் செய்யும் என்று காமநூலிற் கூறலின், அதனை யீண்டுக் கூறினார். அது, 'காமத்தூழுறு கனியை யொத்தாள்.......வேந்தன் அஞ்சிறைப் பறவை யொத்தான்' (சீவக.192) என முன்னர்க் கூறியவற்றானும் உணர்க.
|
( 102 ) |
”அக் கொடியன்னார், தாம் கருதிய இத் தன்மையை எந் நிலத்தினும் இருந்து புணர்ந்து, அக் கருத்து முற்றிய பினனர் மகப்பேற்றை விரும்பி, இவனைப்போலும் புதல்வரைப் பெற வேண்டும் என்று அவன் வடிவழகையெல்லாம் உட்கொண்டு புணர்ந்து கருப்பம் தங்குதலாலே, விளர்த்து, மெலிந்து வயாநோய் செய்து விடுகையினாலே, பின்பு முலையின் முகங்கருகி, வீங்கிப், பாரமாய்த் தமது மென்மைக்கு ஒவ்வாத பஞ்சணைமேலே தங்கினாரென்க.”
|