பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1529 

சிறப்புற்ற நகர்க்கும்; அவன் வீழா ஓகை விட்டான் - அரசன் கெடாத மகிழ்ச்சியாகிய இதனைக் கூறிவிடுத்தான்; விண்பெற்றாரின் விரும்பினார் - அவர்கள் துறக்கம் பெற்றவரைப்போல விரும்பினார்.

   (வி - ம்.) வெள்ளி மலையிற் கலுழ வேகனுக்குக் கூறிவிட்டான். வயங்காக் கூத்து - சீவக சரிதை.

( 106 )
2705 தத்த நிலனு முயர்விழிவும்
  பகையு நட்புந்தந்தசையும்
வைத்து வழுவில் சாதகமும்
  வகுத்த பின்னர்த் தொகுத்தநாட்
சச்சந் தணனே சுதஞ்சணனே
  தரணி கந்துக் கடன்விசயன்
றத்தன் பரதன் கோவிந்த
  னென்று நாமந் தரித்தாரே.

   (இ - ள்.) தத்தம் நிலனும் உயர்வு இழிவும் பகையும் நட்பும் தம் தசையும் வைத்து - கோள்கள் தம் தம் இடங்களில் நிற்கும் நிலையும், அவற்றுட் சில உச்சமும், தாழ்வும், பகையும் நட்பும் கொண்டிருப்பதும், தாம் நிற்கும் தசையும் விளங்க முன்னர் அமைத்து; வழுஇல் சாதகமும் வகுத்த பின்னர் - குற்றம் அற்ற சாதகத்தையும் எழுதிய பிறகு; தொகுத்த நாள் - பன்னிரண்டென்னும் எண்ணாகத் தொகுத்த நாளிலே; சச்சந்தணன் சுதஞ்சணன் தரணி கந்துக்கடன் விசயன் தத்தன் பரதன் கோவிந்தன் என்று நாமம் தரித்தார் - சச்சந்தணன் முதலாக அப்புதல்வர்கள் பெயர்களைச் சுமந்தனர்.

   (வி - ம்.) தேவிமாரை முற்கூறிய முறையே அவர்கள் புதல்வர் பெயர்களையும் வைத்தாரென்க. தரணி - உலோகபாலன் இயற்பெயர். நட்பு மிகுதியால் உலோகபாலன் பெயரும் விசயன்பெயரும் இட்டான். தத்தன் - விசயமா«வியர் தந்தை பெயர். அதனால் கோவிந்தராசன் தன் மகனுக்குச் சீதத்தப் பெயதிட்டனன்; பரதன்; அச்சணந்தியாசிரியன் பெயர்.

( 107 )
2706 ஐயாண் டெய்தி மையாடி
  யறிந்தார் கலைகள் படைநவின்றார்
கொய்பூ மாலை குழன்மின்னுங்
  கொழும்பொற் றொடுங் குண்டலமு
மையன் மார்க டுளக்கின்றி
  யாலுங் கலிமா வெகுண்டூர்ந்தார்
மொய்யா ரலங்கன் மார்பற்கு
  முப்ப தாகி நிறைந்ததே.