பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 153 

   (இ - ள்.) சீற்றம்மிக்க மன்னவன் சேர்ந்த குஞ்சரம் நுதல் - சீற்றம் மிகுந்த சச்சந்தன் தன்னை எதிர்த்த யானைகளின் நெற்றியிலே; கூற்று அருங் குருதிவாள் கோடுஉற அழுத்தலின் - சொல்லுதற்கரிய சிறப்பினையுடைய குருதி படிந்த வாளைத் தந்தங்களிற்பட அழுத்தியபோது; ஊற்றுஉடை நெடுவரை உருமு உடன்று இடித்தென - ஊற்றினையுடைய பெரிய மலையிலே இடிசினந்து தாக்கினாற்போல ஆகி; மாற்றுஅரு மதக்களிறு மத்தகம் பிளந்த - நீங்காத மதமுடைய களிறுகளின் நெற்றிகள் பிளந்தன.

 

   (வி - ம்.) கோடுறவ் வழுத்தலின்: வகரம் வண்ணம் நோக்கி விரிந்தது. ஊற்றறாத மலை மதமறாத களிறுகட்குவமை.

( 249 )
279 வேன்மி டைந்த வேலியும்
  பிளந்து வெங்கண் வீரரை
வான்ம யிர்ச்செய் கேடகத்
  திடித்து வாள்வ லையரிந்
தூனு டைக் குருதியுள்
  ளுழக்கு புத்தி ரிதரத்
தேன்மி டைந்த தாரினான்
  செங்க ளஞ்சி றந்ததே.

   (இ - ள்.) வேல் மிடைந்த வேலியும் பிளந்து - வேல் நெருங்கிய (வீரர்) வேலியையும் பிளந்து; வெங்கண் வீரரை வால் மயிர்செய் கேடகத்து இடித்து - (தடுத்த) கொடிய வீரர்களை ஒளிவிடும் மயிராற் செய்த கேடகத்தால் இடித்து; வாள்வலை அரிந்து - வாள் வலையையும் அறுத்து; ஊன் உடைக் குருதியுள் உழக்குபு திரிதர - ஊனை உடைய குருதி வெள்ளத்திலே உழக்கித் திரிதலால் ; தேன் மிடைந்த தாரினான் செங்களம் சிறந்தது - வண்டுகள் மொய்க்கும் மாலையினனான சச்சந்தனின் போர்க்களம் பொலிவுற்றது.

 

   (வி - ம்.) வேலி ஆகுபெயராதலின் பிரித்தென்னாது பிளந்தென்றார். வலையென்றார் தப்பாமற் சூழ்தலின்.

 

   இத்துணையும் இவன் வென்றியாதலின் இவன் களம் என்றார்.

( 250 )

வேறு

 
280 உப்புடைய முந்நீ ருடன்றுகரை கொல்வ
தொப்புடைய தானையு ளொருதனிய னாகி
யிப்படி யிறைமக னிருங்களிறு நூற
வப்படையு ளண்ணலு மழன்றுகளி றுந்தி,