பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1531 

   (வி - ம்.) 'வீநிறை கொடி' என்றார் புதல்வர்ப் பயந்தமை தோன்ற.

   நிறை - நிறைதல். கோடிகம் - பூந்தட்டு. புரையும் : உவமவுருபு. வீ - மலர் : இது மகவிற்குவமை. கொடியனார் : சீவகன் மனைவிமார். வேந்தன் : சீவகன். படலிகை - பூவிடு பெட்டி. மா - மாமரம். மல்லிகை மாலை : ஒரு தோழி.

( 109 )
2708 தடமுலை முகங்கள் சாடிச்
  சாந்தகங் கிழிந்த மார்பிற்
குடவரை யனைய கோலக்
  குங்குமக் குவவுத் தோளாய்
தொடைமலர் வெறுக்கை யேந்தித்
  துன்னினன் வேனில் வேந்த
னிடமது காண்க வென்றா
  ளிறைவனு மெழுக வென்றான்.

   (இ - ள்.) தடமுலை முகங்கள் சாடி - பெரிய முலை முகங்கள் தாக்கியதனால்; சாந்தகம் கிழிந்த மார்பன் - சாந்து பிளந்த மார்பினையுடைய; குடவரை அனைய கோலக் குங்குமக் குவவுத் தோளாய்! - மேலை மலைபோன்ற அழகிய குங்குமம் பூசிய திரண்ட தோளாய்!; தொடை மலர் வெறுக்கை ஏந்தி - தொடைக்குரிய மலராகிய காணிக்கையை ஏந்தி ; வேனில் வேந்தன் துன்னினன் - வேனில் மன்னன் பொழிலிலே நெருங்கினன்; இடம் அது காண்க என்றாள் - அப்பொழிலே அவனைக் காணுதற்குரிய இடம், நீ சென்று காண்பாயாக என்றாள்; இறைவனும் எழுக என்றான் - அரசனும் எழுக என்றான்.

   (வி - ம்.) தொடை மலர் : தொத்தாக பலர்ந்த மலருமாம்

   சாடி - மோதி. சாந்து - சந்தன முதலியன. குடவரை - மேலைமலை. வெறுக்கை - பொருள் : ஈண்டுக் காணிக்கைப் பொருள் குறித்து நின்றது. பாகுடம் என்பர் நச்சினார்க்கினியா.் வேனில் வேந்தன் : காமன். அஃது இடம் என மாறுக. இறைவன் : சீவகன்.

( 110 )
2709 முடித்தலை முத்த மின்னு
  முகிழ்முலை முற்ற மெல்லாம்
பொடித்துப் பொன் பிதிரிந்தவாகத்
  திளையவர் புகழ்ந்து சூழக்
கடுத்தவாள் கனல வேந்திக்
  கன்னியர் காவ லோம்ப
விடிக்குரற் சீய மொப்பா
  னிழையொளி விளங்கப் புக்கான்.