பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1534 

2713 காதிக்கண் ணரிந்து வென்ற
  வுலகுணர் கடவுள் காலத்
தாதிக்கண் மரங்கள் போன்ற
  வஞ்சொலீ ரிதனி னுங்கள்
காதலிற் காண லுற்ற
  விடமெலாங் காண்மி னென்றா
னீதிக்க ணின்ற செங்கோ
  னிலவுவீற் றிருந்த பூணான்.

   (இ - ள்.) நீதிக்கண் நின்ற செங்கோல் நிலவு வீற்றிருந்த பூணான் - அறத்திலே நிலைபெற்ற செங்கோலையும் நிலவு தங்கிய அணிகளையும் உடைய சீவக மன்னன்; அம் சொலீர் - அழகிய மொழியினீர்!; காதிக் கண் அரிந்து வென்ற உலகு உணர் கடவுள் காலத்து - காதி வினைகளைத் தன்னிடத்தே இல்லையாம் படி வேர் அறுத்து, அவற்றை வென்ற, உலகுணர்ந்த இறைவன் தோன்றின காலமாகிய; ஆதிக்கண் மரங்கள் போன்ற - ஆதிக்கால மரங்கள்போலப் பயனுற்று நின்றன; இதனின் உங்கள் காதலின் காணல் உற்ற இடம் எலாம் காண்மின் என்றான் - இதனாலே நீர் நும் காதலாற் காணவேண்டிய இடங்கள் எல்லாவற்றையும் சென்று காண்பீராக என்றான்.

   (வி - ம்.) காதி - காதிவினைகள், அவை ஞானாவரணீயம் முதலியன. கடவுள் என்றது இடபதீர்த்தங்கரரை. இவர் தோன்றிய காலத்தில் ”முகில்கள் எழுந்து மழை பொழிந்தன; எல்லாக் கூலங்களும் உழுதுவித்தாமல் காலவியல்பானே தாமே விளைந்தன. கற்பக மரங்கள் மறைந்த பின்னர் பல்வேறு வகையான மரங்கள் தாமே தோன்றி மல்கின,”என்று சீ¦புராணம் கூறும். எனவே ஈண்டு ஆதிக்கண் மரங்கள் என்றது அக்காலத்தே தாமே தோன்றியவற்றை என்க. இடபதீர்த்தங்கரர் தோன்றுமுன் இவ்விடமெல்லாம் போகபூமியாயிருந்தது என்றும் அப்பால் கருமபூமியாயிற்று என்றும் கூறுப.

( 115 )
2714 வானவர் மகளி ரென்ன
  வார்கயிற் றூச லூர்ந்துங்
கானவர் மகளி ரென்னக்
  கடிமலர் நல்ல கொய்துந்
தேனிமிர் குன்ற மேறிச்
  சிலம்பெதிர் சென்று கூயுங்
கோனமர் மகளிர் கானிற்
  குழாமயில் பிரிவ தொத்தார்.

   (இ - ள்.) வானவர் மகளிர் என்ன வார்கயிற்று ஊசல் ஊர்ந்தும் - விண்ணவர் மகளிரைப்போல நீண்ட கயிற்றூசலிலே