பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1535 

ஆடியும்; கானவர் மகளிர் என்னக் கடிமலர் நல்ல கொய்தும் - வேட்டுவர் மகளிர் போல மணமுறு மலர்களில் நல்லவற்றைப் பறித்தும்; தேன் இமிர் குன்றம் ஏறிச் சிலம்ப எதிர் சென்று கூயும் - வண்டுகள் முரலும் குன்றுகளிலே ஏறி அவற்றின் எதிரொலி உண்டாகக் கூவியும்; கோன் அமர் மகளிர் கானில் குழாமயில் பிரிவது ஒத்தார் - அரசன் விரும்பும் அரசியர் காட்டிலே குழுமியிருந்த மயில்கள் பிரிந்து செல்வது போன்று சென்றனர்.

   (வி - ம்.) வானவர் மகளிர் ஊசலாடு மகளிர்க்குவமை. கானவர் மகளிர் பூக்கொய்யும் மகளிர்க்குவமை. கடிமலர் - மணமலர். சிலம்பெதிர் கூவுதல் குறிஞ்சி நிலமகளிர் விளையாட்டினுள் ஒன்று. கூயும் - கூவியும். கோன் : சீவகன். கான் - சோலை.

( 116 )
2715 நெடுவரை யருவி யாடிச்
  சந்தன நிவந்த சோலைப்
படுமதங் கவரும் வண்டு
  பைந்தளிர்க் கவரி யேந்திப்
பிடிமகிழ்ந் தோப்ப நின்ற
  பெருங்களிற் றரசு நோக்கி
வடிமதர் மழைக்க ணல்லார்
  மன்னனை மகிழ்ந்து நின்றார்.

   (இ - ள்.) நெடுவரை அருவி ஆடி - பெரிய மலையிலுள்ள அருவியிலே ஆடி; சந்தனம் நிவந்த சோலை - சந்தன மரங்கள் உயர்ந்த சோலையிலே; படுமதம் கவரும் வண்டு பைந்தளிர்க் கவரி ஏந்தி - தன்னிடந்தோன்றும் மதத்தைக் கவரும் வண்டைப் பைந்தளிராகிய கவரியை எடுத்து; பிடி மகிழ்ந்து ஓப்ப நின்ற - பிடி களிப்புடன் ஓட்ட நின்ற; பெருங்களிற்று அரசு நோக்கி - பெரிய களிற்று வேந்தைப் பார்த்து; வடி மதர் மழைக்கண் நல்லார் மன்னனை மகிழ்ந்து நின்றார் - கூரிய மதர்த்த மழைக்கண் மங்கையர் (தாமும் அவ்வாறு இன்பம் நுகர) அரசனை விரும்பி நோக்கி நின்றனா

   (வி - ம்.) சந்தனம் - சந்தன மரம். நிவந்த - உயர்ந்த. படுமதம் : வினைத்தொகை. களிற்றரசு - யூதநாதன். வடி - மாவடு, மன்னன் : சீவகன்.

( 117 )
2716 கொழுமடற் குமரி வாழைத்
  துகிற்சுருள் கொண்டு தோன்றச்
செழுமலர்க் காம வல்லிச்
  செருக்கயல் சிற்ப மாகக்