பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1537 

அழகிய முலையின் சுமையைப் பொறுக்க வியலாமல்; நடைமெலிந்து - நடை தளர்ந்து (தோற்று); நயந்து நிற்பார் - அன்னத்தின் நடையை விரும்பி நிற்பார்.

   (வி - ம்.) கடையுங்காலத்துத் தயிரில் எழுகின்ற ஓசையை ஒத்த குரலையுடைய வேங்கை என்றவாறு. வேங்கை - புலி. ”புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி - தயிர்கலக்கி” என்றும் (பெரும்பாண்.156-8), ”கடையலங்குரல வாள்வரி யுழுவை” என்றும் (அகநா. 277) பிறரும் ஓதுதல் உணர்க. கவரியை ஆன்கன்று பாலுண்ண என்க.

( 119 )
2718 எம்வயின் வருக வேந்த
  னிங்கென விரங்கு நல்லியாழ்
வெம்மையின் விழையப் பண்ணி
  யெஃகுநுண் செவிகள் வீழச்
செம்மையிற் கனிந்த காமத்
  தூதுவிட் டோத முத்தம்
வெம்முலை மகளிர் வீழ்பூம்
  பொதும்பருள் விதும்பி னாரே.

   (இ - ள்.) இங்கு எம் வயின் வேந்தன் வருக என - ஈங்கு நின்ற எம்மிடத்தே அரசன் வருக என்று கருதி ; இரங்கும் நல்யாழ் வெம்மையின் விழையப்பண்ணி - ஒலிக்கும் நல்ல யாழைத் (தாம் கொண்ட) புணர்ச்சி விருப்பத்தாலே விரும்ப இசைத்து; எஃகு நுண் செவிகள் வீழ - அரசனுடைய கூரிய நுண்செவி விரும்ப; செம்மையின் கனிந்த காமத் தூதுவிட்டு - தலைமையுடன் கனிதல் கொண்ட காமத்தின் தூதாக விட்டு; ஓதம் முத்தம் வெம்முலை மகளிர் - கடல் முத்து விரும்பின முலைகளையுடைய அம்மகளிர்; வீழ் பூம் பொதும்பருள் விதும்பினார் - சுற்றுக் கவிந்த இளமரச் செறிவிலே கூடுதற்கு விதும்பினார்.

   (வி - ம்.) விதும்பினார் - நடுங்கினார். கேட்டால் காமத்தையே விரும்புதலிற் பாட்டைக் 'காமத்தூது' என்றார். எஃகுநுண் செவி; தோற்செவி, மரச்செவி, எஃகுச் செவி என்பனவற்றுள் மிக்கது.

( 120 )
2719 பிடிமரு ணடையி னார்தம்
  பெருங்கவின் குழையப் புல்லித்
தொடைமலர்க் கண்ணி சோ்த்திச்
  சுரும்புண மலர்ந்த மாலை
யுடைமது வொழுகச் சூட்டி
  யுருவத்தார் குழைய வைகிக்
கடிமலர் மகளி ரொத்தார்
  காவலன் களிவண் டொத்தான்.