| முத்தி இலம்பகம் |
1542 |
|
|
|
இழிபென்றது. இளிவரலாகிய சுவையாதலின் அதனை உணர்த்தும் நால்வகை மெய்ப்பாட்டில் மூப்பினையே கொள்க. அது, 'மூப்பே பிணியே வருத்தம் மென்மையோ - டியாப்புற வந்த இளிவரல் நான்கே' (தொல். மெய். 6) என்பதனாலுணர்க. இனி நான்கையும் வெறுத்தான் என்றுமாம்.
|
( 127 ) |
| 2726 |
கைப்பழ மிழந்த மந்தி | |
| |
கட்டியங் கார னொத்த | |
| |
திப்பழந் துரந்து கொண்ட | |
| |
சிலதனு மென்னை யொத்தா | |
| |
னிப்பழ மின்று போகத் | |
| |
தின்பமே போலு மென்று | |
| |
மெய்ப்பட வுணர்வு தோன்றி | |
| |
மீட்டிது கூறி னானே. | |
|
|
(இ - ள்.) கைப்பழம் இழந்த மந்தி கட்டியங்காரன் ஒத்தது - கையிலுள்ள பழத்தை இழந்த மந்தி கட்டியங்காரனைப் போன்றது; இப்பழம் துரந்து கொண்ட சிலதனும் என்னை ஒத்தான் - இப் பழத்தை அவற்றை ஓட்டிக் கைக்கொண்ட பணியாளனும் என்னைப் போன்றான்; இப்பழம் இன்று போகத்து இன்பமே போலும் என்று - இப்பழத்தை நுகர்ந்து இவன் எய்தும் இன்பம் இன்று யான் நுகர்கின்ற இன்பத்தையே ஒக்கும் என்று; மெய்ப்பட உணர்வு தோன்றி - உண்மையாக உணர்வு பெற்று; மீட்டு இது கூறினான் - திரும்பவும் தன்னுளத்துடன் இதனையுங் கூறுகின்றான்.
|
|
(வி - ம்.) அரசை இழந்த கட்டியங்காரனை ஒத்தது என்றவாறு. அரசு பழத்திற்குவமை. சிலதன் - பணியாளன்; இப்பழத்தை நுகர்ந்து இவன் எய்தும் இன்பம் யானுகரும் இவ்வின்பமே போலும் என்பது கருத்து.
|
( 128 ) |
| 2727 |
மெலியவர் பெற்ற செல்வம் | |
| |
வேரொடுங் கீழ்ந்து வெளவி | |
| |
வலியவர் கொண்டு மேலை | |
| |
வரம்பிகந் தரம்பு செய்யுங் | |
| |
கலியது பிறவி கண்டாங் | |
| |
காலத்தா லடங்கி நோற்று | |
| |
நலிவிலா வுலக மெய்த | |
| |
னல்லதே போலு மென்றான். | |
|
|
(இ - ள்.) மெலியவர் பெற்ற செல்வம் வேரொடும் கீழ்ந்து - வலிமையில்லாதவர் பெற்ற செல்வத்தை வேரொடு பறித்து;
|