பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1545 

   (வி - ம்.) 'தளிர் கவரி வீச' என்றார் பொதும்பரிடைத் தனியே நிற்றலின். காமனோடு உவமித்தார் மனவேட்கையடங்குதலின். 'சிலை வலான் போலுஞ் செறிவினான்' (கலி.143) என்றார் பிறரும்.

( 132 )
2731 நடுச்சிகை முத்துத் தாமம்
  வாணுத னான்று நக்கப்
படுத்தனர் பைம்பொற் கட்டில்
  பாடினர் கீதந் தூப
மெடுத்தன ரெழுந்து தேனா
  ரெரிமணி வீணை யார்த்த
கொடிப்பல பூத்துச் சூழ்ந்த
  குங்குமக் குன்ற மொத்தான்.

   (இ - ள்.) சிகைநடு முத்துத் தாமம் வாள்நுதல் நான்று நக்க - கூந்தலின் நடுவிலே தலைப்பாளை தூக்கித் தொட்டுக் கொண்டிருக்க நின்று; பைம்பொன் கட்டில் படுத்தனர் - பொன்னால் ஆன கட்டிலை யிட்டனர்; கீதம் பாடினர் - (சிலர்) பண் இசைத்தனர்; தூபம் எடுத்தனர் - நறும்புகை ஏந்தினர்; தேன்ஆர் எரிமணி வீணை எழுந்து ஆர்த்த - (பிறகு) இனிமை நிறைந்த, ஒளிவிடும் மணிகள் இழைத்த யாழ்கள் எழுந்து ஒலித்தன; (இந் நிலையில் மகளிர் சூழக் கட்டிலில் இருந்த சீவகன்); கொடிப்பல பூத்துச் சூழ்ந்த குங்குமக் குன்றம் ஒத்தான் - கொடிகள் பல மலர்ந்து சூழந்த குங்கும மலையைப் போன்றான்.

   (வி - ம்.) சிகைநடு என மாறுக. முத்துத்தாமம் என்றது தலைப்பாளை என்னும் ஒருவகைத் தலைக்கோலத்தை. நக்க - தொட. பணி மகளிர் என எழுவாய் வருவித்தோதுக. கட்டிலைப் படுத்தனர்; கீதம் பாடினர்; என்க. தேனார் வீணை : எரிமணி வீணை என இயைக்க.

( 133 )
2732 மௌ்ளவே புருவங் கோலி
  விலங்கிக்கண் பிறழ நோக்கி
முள்ளெயி றிலங்கச் செவ்வாய்
  முறுவற்றூ தாதி யாக
வள்ளிக்கொண் டுண்ணக் காமங்
  கனிவித்தார் பனிவிற் றாழ்ந்த
வள்ளிதழ் மாலை மார்பன்
  வச்சிர மனத்த னானான்.

   (இ - ள்.) புருவம் மௌ்ளக் கோலி - தம் புருவத்தை மெல்ல வளைத்து; கண் விலங்கிப் பிறழ நோக்கி - கண்கள் குறுக்காகிப் பிறழும்படி நோக்கி; செவ்வாய் முள் எயிறு இலங்க -