| முத்தி இலம்பகம் |
1546 |
|
|
|
சிவந்த வாயிலே முள்ளனைய பற்கள் விளங்க; முறுவல் தூது ஆதி ஆக - முறுவலிக்கும் முறுவல் தூது முதலாக; காமம் அள்ளிக்கொண்டு உண்ணக் கனிவித்தார் - அவன் காமவின்பத்தை வாரி உண்ணும்படி பழுப்பித்துப் பார்த்தார்; பனிவில் தாழ்ந்தவள் இதழ்மாலை மார்பன் - முத்துவடம் தங்கிய, வளவிய மலர் மாலையுடைய மார்பன்; வச்சிர மனத்தன் ஆனான்- (நெகிழாமல்) துறவின்கண்ணே உறுதி பூண்ட உள்ளத்தன் ஆயினான்.
|
|
(வி - ம்.) பனிவில் - முத்துவடம் : (ஆகுபெயர்).
|
|
கோலி - வளைத்து. கண்விலங்கிப் பிறழ என்க. முறுவலாகிய தூது என்க. கனிவித்துப் பார்த்தார் என்க. வச்சிர மனம் - உறுதியுடைய மனம்.
|
( 134 ) |
| 2733 |
முலைமுகஞ் சுமந்த முத்தத் | |
| |
தொத்தொளிர் மாலை யாரு | |
| |
மலைமுகந் தனைய மார்பின் | |
| |
மன்னனு மிருந்த போழ்திற் | |
| |
கொலைமுகக் களிற னாற்கு | |
| |
நாழிகை சென்று கூறக் | |
| |
கலைமுக மல்லர் புல்லிக் | |
| |
கமழுநீ ராட்டி னாரே. | |
|
|
(இ - ள்.) முலைமுகம் சுமந்த முத்தத் தொத்து ஒளிர் மாலையாரும் - முலைத்தலை சுமந்த முத்துக் கொத்து விளங்கும் மாலையுடைய மகளிரும்; மலை முகந்த அனைய மார்பின் மன்னனும் - மலையின் பெருமையை வாரிக்கொண்டாற் போன்ற மார்பையுடைய வேந்தனும்; இருந்த போழ்தில் - அமர்ந்திருந்த போது; கொலைமுகக் களிறனாற்கு நாழிகை சென்று கூற - கொலைத்தன்மையுடைய களிறு போன்ற சீவகற்குக் கணிகள் சென்று நாழிகை கூற; கலைமுக மல்லர் புல்லிக் கமழுநீர் ஆட்டினார் - நீராட்டுங் கலை தேர்ந்த மல்லர் உடம்பைத் தடவி நறுமணங் கமழும் நீரால் ஆட்டினார்.
|
|
(வி - ம்.) முலைமுகம் என்புழி முகம் ஏழாவதன் சொல்லுருபு. தொத்து - கொத்து. மாலையார் : தேவிமார். மன்னன் : சீவகன். மலையின் பெருமையைக் கொள்ளைகொண்டாற் போலும் மார்பு என்க. கணிகள் சென்று நாழிகை கூற என்க. மஞ்சனமாட்டுதற்குக் கூறிய இலக்கணந் துறைபோகக் கற்ற மல்லர் என்க.
|
( 135 ) |
| 2734 |
வெண்டுகின் மாலை சாந்தம் | |
| |
விழுக்கலம் விதியிற் சோ்த்தி | |
| |
நுண்டுகிற் றிரைகள் சோ்ந்த | |
| |
நூற்றுலா மண்ட பத்துக் | |
| |
|