பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 155 

நன்றாக வெட்டுதலால்; களிறு கைமுதல் துணிந்துஆழ அது நோனான் - அம் மதயானை துதிக்கையின் அடி வெட்டுண்டு வீழா நிற்க, அதனைக் (கட்டியங்காரன்) பொறானாகி ;

 

   (வி - ம்.) இப்பாட்டுக் குளகம்.

 

   நுதி - முனை. தவ - மிக. முதல் - அடி.

( 253 )
283 மாலநுதி கொண்டுமழை மின்னென விமைக்கும்
வேலைவல னேந்திவிரி தாமமழ கழியச்
சோலைமயி லார்கடுணை வெம்முலைக டுஞ்சுங்
கோலவரை மார்பினுறு கூற்றென எறிந்தான்.

   (இ - ள்.) நுதிமாலை கொண்டு மழை மின்என இமைக்கும் வேலை வலன்ஏந்தி - நுனியில் மாலையணிந்து முகிலிடை மின் என்று ஒளிரும் வேலை வலக்கையில் எடுத்து; சோலை மயிலார்கள் துணை வெம்முலைகள் துஞ்சும் கோலவரை மார்பின் - பொழிலிடையே மயில்போன்ற மகளிரின் விருப்பமூட்டும் துணைமுலைகள் துயிலும் அழகிய மலையனைய மார்பிலே; விரிதாமம் அழகு அழிய - மலர்ந்த வாகைமாலை அழகுகெட; உறுகூற்று என எறிந்தான் - தாக்கும் கூற்று என எறிந்தான்.

 

   (வி - ம்.) மயிலின் தன்மையார் என்ற பன்மையால் தேவியர் பலராயினார். [சச்சந்தனுக்குத் தேவியர் பலருண்டென்றும் காமக்கிழத்தியர் ஐந்நூற்றுவர் என்றும், க்ஷத்திர சூளாமணி என்ற நூல் கூறும்.] 'முளைகள் துஞ்சும் மார்பு' எனவே முன் தனக்கு நிகராக எறிவாரின்மை பெறப்பட்டது; 'மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர் - மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப' (புறநா. 10) என்றார் பிறரும். 'யானை ஆழ எறிந்தான்' என முடிக்க.

( 254 )

வேறு

 
284 புண்ணிடங் கொண்ட வெஃகம்
  பறித்தலிற் பொன்ன னார்தங்
கண்ணிடங் கொண்ட மார்பிற்
  றடாயின காது வெள்வேன்
மண்ணிடங் கொண்ட யானை
  மணிமருப் பிடையிட் டம்ம
விண்ணிட மள்ளர் கொள்ள
  மிறைக்கொளி திருத்தி னானே.

   (இ - ள்.) புண்இடங் கொண்ட எஃகம் பறித்தலின் - மார்பிலே தைத்து நின்ற வேலைப் பறித்ததால்; பொன்னனார்தம் கண் இடம்கொண்ட மார்பில் தடாயின காது வெள்வேல் - திரு