| முத்தி இலம்பகம் |
1559 |
|
|
| 2757 |
கெடுத லவ்வழி யில்லெனிற் | |
| |
கேள்விக டுறைபோய் | |
| |
வடிகொள் கண்ணியர் மனங்குழைந் | |
| |
தநங்கனென் றிரங்கக் | |
| |
கொடையுங் கோலமுங் குழகுந்தம் | |
| |
மழகுங்கண் டேத்த | |
| |
விடையிற் செல்வுழி விளியினும் | |
| |
விளியுமற் றறிநீ. | |
|
|
(இ - ள்.) அவ்வழி கெடுதல் இல் எனின் - அவ்வழிக் கெடுதல் இல்லையெனின்; கேள்விகள் துறைபோய் - நூல்களை முற்றக் கற்று; வடிகொள் கண்ணியர் மனம் குழைந்து - மாவடு வைப்போன்ற கண்ணியர் உள்ளம் குழைந்து; அநங்கன் என்று இரங்க - காமன் என்று உருகி; கொடையும் கோலமும் குழகும் தம் அழகும் கண்டு ஏத்த - கொடை, ஒப்பனை, இளமை, அழகு ஆகியவற்றைக் கண்டு வாழ்த்த; விடையின் செல்வுழி விளியினும் விளியும் - காளைபோல நடக்கும் அக்காலத்தே இறப்பினும் இறக்கும்; நீ அறி - நீ இதனை அறிக.
|
|
(வி - ம்.) மற்று : வினைமாற்று. 'பரிசிலர் கொடையை ஏத்த' என்பர் நச்சினார்க்கினியர்.
|
|
கேள்வி - ஈண்டுக் கல்வி கேள்விகளில் என்பதுபட நின்றது. துறை போதல் - முற்றக்கற்றல். வடி - மாவடு. அநங்கன் - காமன். குழகு - இளமை. விடை - காளை.
|
( 159 ) |
| 2758 |
எரிபொன் மேகலை யிலங்கரிச் | |
| |
சிலம்பொடு சிலம்பு | |
| |
மரிபொற் கிண்கிணி யணியிழை | |
| |
யரிவையர்ப் புணர்ந்து | |
| |
தெரிவில் போகத்துக் கூற்றுவன் | |
| |
செகுத்திடச் சிதைந்து | |
| |
முரியும் பல்சன முகம்புடைத் | |
| |
தகங்குழைந் தழவே | |
|
|
(இ - ள்.) எரிபொன் மேகலை இலங்கு அரிச் சிலம்பொடு சிலம்பும் அரிபொன் கிண்கிணி அணி இழை - ஒளி வீசும் பொன்னாலான மேகலையும், விளங்கும் பரல்களையுடைய சிலம்பும், ஒலிக்கும் அரிகளையுடைய பொன்னாலான கிண்கிணியும், அழகிய அணிகலனும் உடைய; அரிவையர்ப்புணர்ந்து - மங்கையரைக் கூடி; தெரிவு இல் போகத்து - வேறொன்றும் தெரியாத இன்ப
|