நாமகள் இலம்பகம் |
156 |
|
வனைய மகளிரின் கண்களுக்கு இடமான மார்பிலே தாக்கி வளைந்த அவ்வேலை; மண்இடம் கொண்ட யானை மணி மருப்பிடை இட்டு - நிலமிசை பட்டுவீழ்ந்த யானையின் மணிபொதிந்த கொம்பிடை வைத்து; விண்இடம் மள்ளர்கொள்ள மிறைக்கொளி திருத்தினான்- வீரர்கள் வானிலே இடம்பெற அவ்வளைவுக்கு உண்டான இளக்கத்தைப் போக்கினான்.
|
|
(வி - ம்.) 'தடாயின வேல்' என்க. தடாயின : தட என்னும் உரிச்சொல் அடியிற் பிறந்த பெயரெச்சம் . அம்ம : அசை. மிறைக் கொளி - வளைவு கொண்டது.
|
( 255 ) |
285 |
ஏந்தல்வே றிருத்த யானை |
|
யிரிந்தன வெரிபொற் கண்ணி |
|
நாந்தக வுழவர் நண்ணார் |
|
கூற்றென நடுங்கி மள்ளர் |
|
சாய்ந்தபின் றறுக ணாண்மைக் |
|
கட்டியங் காரன் வேழங் |
|
காய்ந்தனன் கடுக வுந்திக் |
|
கப்பணஞ் சிதறி னானே.. |
|
(இ - ள்.) ஏந்தல் வேல் திருத்த - சச்சந்தன் வேலைத் திருத்தியதால்; யானை இரிந்தன - யானைகள் ஓடின ; எரிபொன் கண்ணி நாந்தக உழவர் நண்ணார் - ஒளிவிடும் பொற்கண்ணி அணிந்த வாள்வீரர் அணுகாராய்; கூற்று என நடுங்கி மள்ளர் சாய்ந்தபின் - கூற்றுவனாகச் சச்சந்தனை எண்ணி அஞ்சி அவ்வீரர் ஓடிய பிறகு; தறுகண் ஆண்மைக் கட்டியங்காரன் காய்ந்தனன் வேழம் கடுக உந்தி - அஞ்சாத வீரனான கட்டியங்காரன் அவர்களைச் சினந்து, (மற்றொரு) யானையை விரையத் தூண்டி; கப்பணம் சிதறினான் - கப்பணம் என்னும் படையை வீசினான்.
|
|
(வி - ம்.) கப்பணம் : இரும்பால் ஆன ஆனை நெஞ்சிமுள் போன்ற படை. முன் இவன் ஊர்ந்த யானை துதிக்கை வெட்டுண்டு வீழ்ந்ததால் இப்போது கடுகவுந்திய வேழம் வேறொன்று என உணர்க. நண்ணார், காய்ந்தனன் : முற்றெச்சங்கள். [நச்சினார்க்கினியர் மள்ளரை யானைகளைச் செலுத்துவோர் எனக்கொண்டு 'மள்ளர் சாய்ந்தபின் யானை இரிந்தன' என மாட்டேறு செய்வர். 'நண்ணார் : வினைமுற்று' என்பர்.]
|
( 256 ) |
286 |
குன்றமார் பரிந்து வெள்வேற் |
|
குடுமிமா மஞ்ஞை யூர்ந்து |
|
நின்றமால் புருவம் போல |
|
நெரிமுரி புருவ மாக்கிக |
|