| முத்தி இலம்பகம் |
1563 |
|
|
| 2764 |
இட்டிவேல் குந்தங் கூர்வா | |
| |
ளெரிநுனைச் சுரிகை கூட | |
| |
நட்டவை நிரைத்த பூமி | |
| |
நவையுடை நரகர் பொங்கி | |
| |
யுட்பட வெழுந்து வீழ்ந்தாங் | |
| |
கூன்றகர்த் திட்ட வண்ண | |
| |
மெட்டெலாத் திசையுஞ் சிந்திக் | |
| |
கிடப்பவா லடக்க மில்லார். | |
|
|
(இ - ள்.) அடக்கம் இல்லார் நவை உடை நரகர் - (முன்னர்) ஐம்பொறிகளில் அடக்கம் இல்லாராய்த் தீவினையை உடையராகிய நரகர்; இட்டி வேல் குந்தம் கூர்வாள் எரிநுனைச் சுரிகை கூட - ஈட்டியும் வேலும் குந்தமும் கூரிய வாளும் எரியும் முனையையுடைய சுரிகையும் கூட; நட்டவை நிரைத்த பூமி - நட்டவை நிரைத்து நிற்கின்ற பூமியிலே; பொங்கி எழுந்து உள்பட வீழ்ந்து - துன்பத்தாலே பொங்கி எழுந்து (அப்படைகளின்) அழுந்தும்படி வீழ்ந்து; ஆங்கு ஊன் தகர்த்திட்ட வண்ணம் - அவ்விடத்தில் ஊனைச் சிதறத் தட்டினாற்போல; எட்டு எலாத் திசையும் சிந்திக் கிடப்ப - எட்டாகிய எல்லாத் திசையினுஞ் சிதறிக் கிடப்பர்.
|
|
(வி - ம்.) ஆல் : அசை.
|
|
இட்டி - ஈட்டி. சுரிகை - ஒருவகை வாள். நவை - குற்றம். வண்ணம் - உவமப்பொருட்டு. எட்டுத் திசையெலாம் என இயைக்க. ஆல் : அசை. அடக்கமிலார் சிந்திக் கிடப்ப என்க.
|
( 166 ) |
| 2765 |
வெந்தடி தின்ற வெந்நோய் | |
| |
வேகத்தான் மீட்டு மாலை | |
| |
பைந்தொடி மகளி ராடும் | |
| |
பந்தென வெழுந்து பொங்கி | |
| |
வந்துடைந் துருகி வீழ்ந்து | |
| |
மாழ்குபு கிடப்பர் கண்டாய் | |
| |
கந்தடு வெகுளி வேகக் | |
| |
கடாமுகக் களிற்று வேந்தே. | |
|
|
(இ - ள்.) கந்து அடு வெகுளி வேகக் கடாமுகக் களிறு வேந்தே - தூணைத் தகர்க்கும் சீற்றமும் விரைவும் மதமுங் கொண்ட களிற்றையுடைய வேந்தனே!; வெம் தடி தின்ற வேம் நோய் வேகத்தால் - (முற்பிறப்பிலே) கொடிய ஊனைத் தின்ற கொடிய தீவினையின் கொடுமையாலே; பைந்தொடி மகளிர் ஆடும் பந்து என - பசிய வளையல் அணிந்த பெண்கள்
|