பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1567 

   (வி - ம்.) மாக்கள் - விலங்கு : (பறவைகளும்). கூற்றம் - இயமன் கொலைநர் - கொலைத்தொழில் செய்வோர். கும்பி - நரகம். நரமவேல் - அஞ்சுதற்குக் காரணமான வேல்.

( 172 )
2771 பாரகங் கழுநர் போலப்
  பரூஉத்தடி பலரு மேந்தி
வீரநோய் வெகுளி தோற்றி
  விழுப்பற வதுக்கி யிட்டுக்
காரகற் பொரிப்பர் கண்ணுட்
  சுரிகையை நடுவர் நெஞ்சிற்
பாரக்கூர்ந் தறிக ணட்டுப்
  பனையெனப் பிளப்பர் மாதோ.

   (இ - ள்.) பாரகம் கழுநர்போல - பாரிலுள்ளார் செய்த தீவினைகளைத் தாம் கழுவுவார்போல; பலரும் பரூஉத் தடி ஏந்தி - நிரயபாலர் பலரும் பெரிய தடிகளை ஏந்தி; வீரநோய் வெகுளி தோற்றி - வலிய நோயைத் தருஞ் சீற்றத்தைக் காட்டி; விழுப்புஅற அதுக்கியிட்டு - (அவர்களுடம்பிற்) கழிவது ஒன்றும் இல்லையாம்படி கூட நருக்கியிட்டு; காரகல் பொரிப்பர் - (சிலரைக்) காரகலிலே பொரிப்பர்; கண்ணுள் சுரிகைல் நடுவர் - (சிலரைக்) கண்ணிலே குத்துவாளை நடுவர்; (நெஞ்சில்) பாரக்கூர்ந் தறிகள் நட்டுப் பனையெனப் பிளப்பர் - (சிலயை நெஞ்சிலை பெரிய கூரிய முளைகளை புடைத்துப் பனைபோலப் பிளப்பர்.

   (வி - ம்.) பல்லுயிரும்தாம் செய்த வினையைத் தாமே நுகரினும் அதனை முயன்று நுகர்வித்துக் கழிப்பராதலின், 'கழுநர்போல்' என்றார். இஃது ஒப்பில் பாலி.

( 173 )
2772 நாப்புடை பெயர்த்த லாற்றார்
  நயந்துநீர் வேட்டு நோக்கிப்
பூப்புடை யணிந்த பொய்கை
  புக்குநீ ருண்ண லுற்றாற்
சீப்படு குழம்ப தாகிச்
  செல்லலுற் றந்தோ வென்னக்
கூப்பிடு குரலாய் நிற்பர்
  குறைப்பனைக் குழாங்க ளொத்தே.

   (இ - ள்.) நீர் வேட்டு - நீரை விரும்பி; நாப்புடை பெயர்த்தல் ஆற்றார் - நாவை (வறட்சியால்) அசைத்தல் ஆற்றாராய்; பூப்புடை அணிந்த பொகைய் நயந்து நோக்கி - பூ மலர்ந்த