பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1571 

தன்மையுடைய வேந்தர்களை அடக்கிய வலியினையும் வருத்தும் வேலினையும் உடைய வேந்தனே!; நரகம் எரிநீரவே - நரகம் எப்போதும் எரியும் தன்மையவே; விலங்குதாமுடைய துன்பம் அந்நரகத்து ஒருநீரவே - விலங்குகள் கொண்ட துன்பம் அந் நரகத்திலே பல்லுயிரும் உறும் துன்பத்துடன் ஒரு தன்மையவே.

   (வி - ம்.) எரி - நெருப்புமாம். ஒருநீர - ஒருதன்மையுடையன. தாம் : அசை. அணங்கு - வருத்துகின்ற. அச்சு அணங்கு - அஞ்சுதற்குக் காரணமான வருத்தம் எனினுமாம்.

( 179 )
2778 கழைபொதிர்ப்பத் தேன்சொரிந்து
  காய்த்தினைக ளார்த்து
மழை தவழுங் குன்றில்
  வயமா முழங்க
வுழையளிய தாமுறூஉந்
  துன்பங்க ணின்மேல்
விழைவயரா வேந்துறூஉந்
  துன்பமே கண்டாய்.

   (இ - ள்.) கழை பொதிர்ப்பத் தேன் சொரிந்து காய்த்தினைகள் ஆர்த்தும் - (இறாலிலே) மூங்கில் துளைக்க அது தேனைப் பெய்து காயையுடைய தினைகளை ஊட்டுகிற; மழை தவழும் குன்றில் - முகில் உலாவும் குன்றிலே; வயமா முழங்க - புலிகள் முழங்க; அளிய உழைதாம் உறூஉம் துன்பங்கள் - இரங்கத்தக்க மான்கள் அடையும் துன்பங்கள்; நின்மேல் விழைவு அயரா வேந்து உறூஉம் துன்பமே கண்டாய் - நின்னிடத்து விருப்பங்காட்டாத வேந்தர்கள் உறும் துன்பமென்றே அறிக.

   (வி - ம்.) கழை - மூங்கில். பொதிர்த்தல் - துளைத்தல். காய்த்த : ஈறுகெட்ட தெனினுமாம். தினையை ஆர்த்தும் குன்று, மழை தவழும் குன்று எனத் தனித்தனி கூட்டுக. வயமா - புலி. உழை - மான்.

( 180 )
2779 நிணம்பிலிற்றும் வாயர் நெருப்பிமைக்குங் கண்ணர்
குணனஞ்சர் கூற்றனைய கோணாய் மடுப்பக்
கணமஞ்ஞை யஞ்சிக் கழுத்தொளிப்ப கண்டாய்
மணமல்கு பூந்தார் மழைதழீஇய கையாய்.

   (இ - ள்.) மணம் மல்கு பூந்தார் மழை தழீஇய கையாய்! - மணம் நிறைந்த மலர்த் தாரினையும் முகிலைத் தழுவிய கையினையும் உடையாய்!; நிணம் பிலிற்றும் வாயர் - நிணம் துளிக்கும் வாயராய்; நெருப்பு இமைக்கும் கண்ணர் - நெருப்பென இமைக்