பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 158 

கொண்ட ' என்பது பாடமாயின் திருமால் உட்கொண்ட சக்கரம் என்க' [மதியனைய சக்கரம்.]

 

   'தோளசைந்து' என்றும் பாடம்.

( 258 )
288 ஆரமரு ளாண்டகையு மன்னவகை வீழும்
வீரரெறி வெம்படைகள் வீழவிமை யானாய்ப்
பேரமரு ளன்றுபெருந் தாதையொடும் பேராப்
போரமரு ணின்றவிளை யோனிற்பொலி வுற்றான்.

   (இ - ள்.) ஆண்டகையும் ஆர்அமருள் அன்னவகை வீழும் வீரர்எறி வெம்படைகள் - ஆடவரிற் சிறப்புற்ற சச்சந்தனும் நிறைந்த போரில் முற்கூறியவாறு விரும்பும் வீரர் எறிகின்ற வெவ்விய படைகள்; வீழ இமையானாய் - வீழும்போதும் இமையாதவனாகி; அன்று பேர் அமருள் பெருந்தாதையொடும் பேரா - முற்காலத்திலே பெரும் போராகிய பாதப் போரிலே தன் பெரிய தந்தையான கன்னனுடனே மாறுபட்டுப் புறங்கொடாமல்; போர் அமருள் நின்ற இளையோனின் பொலிவு உற்றான் - பொரும் போரிலே நிலைத்துநின்ற அபிமன்னனைப்போலப் பொலிவு பெற்றான்.

 

   (வி - ம்.) வீழும்- விரும்பும். இனி, 1'நீடும்' பாடமாயின் நெடும் பொழுதாம்; 'நீடு நின்றனன்' என்றார் பிறரும்.

 

   ஆண்டகை - சச்சந்தன். ”விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு” (குறள், 775) என்பது பற்றி 'இமையானாய்' என்றார். பேரமர் என்றது பாரதப் போரினை, அன்று என்றது உலகறி சுட்டு. பெருந்தாதை - கன்னன். இளையோன் - அபிமன்.

( 259 )
289 போழ்ந்துகதிர் நேமியொடு வேல்பொரு தழுந்தத்
தாழ்ந்துதறு கண்ணிணைக டீயழல விழியா
வீழ்ந்துநில மாமகடன் வெம்முலை ஞெமுங்க
வாழ்ந்துபடு வெஞ்சுடரி னாண்டகை யவிந்தான்.

   (இ - ள்.) கதிர் நேமியொடு வேல்பொருது போழ்ந்து அழுந்த - ஒளிவிடும் ஆழியும் வேலும் தாக்கிப் பிளந்து அழுந்துதலாலே; தாழ்ந்து - மெய்வலி குறைந்து; தறுகண் இணைகள் தீஅழல் விழியா வீழ்ந்து - அஞ்சாத இரு கண்களும் தீயைச் சொரிய விழித்தவாறு வீழ்ந்து ; மாநில மகள்தன் வெம்முலை ஞெமுங்க ஆழ்ந்து - பெருநில மகளிரின் விருப்பமூட்டும் முலைகள்

 

1. 'நீடும் போரமருள்.'