| முத்தி இலம்பகம் |
1582 |
|
|
13. தேவகதித் துன்பம்
|
| 2800 |
திருவிற்போற் குலாய தேந்தார்த் | |
| |
தேவர்தந் தன்மை செப்பிற் | |
| |
கருவத்துச் சென்று தோன்றார் | |
| |
கானிலந் தோய்தல் செல்லா | |
| |
ருருவமே லெழுத லாகா | |
| |
வொளியுமிழ்ந் திலங்கு மேனி | |
| |
பருதியி னியன்ற தொக்கும் | |
| |
பன்மலர்க் கண்ணி வாடா. | |
|
|
(இ - ள்.) திருவில்போல் குலாய தேன் தார்த் தேவர்தம் தன்மை செப்பின் - வான வில்லென விளங்கும் தேன் பொருந்திய மாலையணிந்த வானவரின் தன்மையை விளம்பின்; கருவத்துச் சென்று தோன்றார் - கருவிலே போய்ப் பிறவார்; கால் நிலம் தோய்தல் செல்லார் - கால் நிலத்திலே தோய்தலைப் பொருந்தார்; உருவமேல் - அவருருவைக் கூறின்; எழுதல் ஆகா - எழுதவியலாதன; ஒளி உமிழ்ந்து இலங்கும் மேனி - அவர்களுடைய ஒளியைத் தோற்றி விளங்கும் நிறம்; பருதியின் இயன்றது ஒக்கும் - ஞாயிற்றினாலே அமைந்தது போன்றதாம்; பல்மலர்க் கண்ணி வாடா - அவர் அணிந்த பல மலர்க் கண்ணிகளும் வாடமாட்டா.
|
|
(வி - ம்.) திருவில் - வானவில்; இது தாருக்குவமை. கருவத்து என்புழி அத்து, சாரியை. எழுதலாகாவாகும் என்க. பருதி - ஞாயிறு.
|
|
தேவர் கருவிற்பிறவார், கானிலந்தோயப்பெறார், அவர் உருவம் எழுதவியலாத சிறப்புடையன. உடம்பு ஒளிமிக்கன; அவர் அணிந்த மாலைகள் பாடமாட்டா என்பதாம்.
|
( 202 ) |
| 2801 |
அங்கையு மடியு நோக்கிற் | |
| |
றாமரை யலர்ந்த தொக்கும் | |
| |
பங்கய மனைய செங்கண் | |
| |
பகுவொளிப் பவழஞ் செவ்வாய் | |
| |
செங்கதிர் முறுவன் முத்தின் | |
| |
றெளிநகை திகழுஞ் செய்யாள் | |
| |
வெங்கடை மழைக்க ணோக்கி | |
| |
வெய்துறத் திரண்ட வன்றே. | |
|
|
(இ - ள்.) அங்கையுங் அடியும் நோக்கின் தாமரை அலர்ந்தது ஒக்கும் - (அவர்களுடைய தேவியருக்கு) அழகிய கையை
|