முத்தி இலம்பகம் |
1584 |
|
|
(வி - ம்.) ததைதல் - செறிதல். ஏ - அம்பு, ஈண்டுக் காமனம்புகளாகிய மலரம்புகள் - இவை மாதர் எண் முதலியவற்றிற்குவமை. இனி, காமன் அம்பை வழங்குவதற்குக் காரணமான கொடியன்னார் எனினு
|
2803 |
சிதரரி யொழுகி யோடிச் செவியுறப் போழ்ந்து நீண்ட | |
|
மதரரி மழைக்க ணம்பா வாங்குவிற் புருவ மாகத் | |
|
துதைமணிக் கலாப மின்னத் தொன்மலர்க் காம னம்பு | |
|
புதைமலர் மார்பத் தெய்யப் பூவணை மயங்கி வீழ்வார். | |
|
|
(இ - ள்.) காமன் தொன்மலர் அம்பு புதைமலர் மார்பத்து - காமனுடைய பழைய மலர்க்கணைகள் புதைந்து வானவரின் மலர்ந்த மார்பிலே; சிதர் அரி ஒழுகி ஓடிச் செவியுறப் போழ்ந்து நீண்ட - சிதரின் செவ்வரியுடைய, நீண்டு சென்று செவியை உறவும் பிளந்து நீண்ட; மதர் அரி மழைக்கண் அம்புஆ - கதிர்த்த அழகுற்ற மழைக்கண் அம்பாகவும்; வாங்குவில் புருவம் ஆக - புருவம் வளைந்த வில்லாகவும் (கொண்டு); எய்ய மயங்கி - அரம்பையர் எய்தலாலே மயங்கி; துதை மணிக்கலாபம் மின்ன வீழ்வார் - (அம்மங்கையரின்) நெருங்கிய மணிகளையுடைய கலாபம் ஒளிர (அணையிலே தழுவி) வீழ்வர்.
|
(வி - ம்.) கலாபம் மின்ன அணையிலே வீழ்வர் என்றது இடக்கரடக்கு. ”கலாபம் மின்ன என்றது புணர்ச்சியை” என்றார் நச்சினார்க்கினியர். சிதரரி : வினைத்தொகை.
|
( 205 ) |
2804 |
பூத்ததை கொம்பு போன்று | |
|
பொன்னிழை சுடரு மேனி | |
|
யேத்தருங் கொடிய னாரை | |
|
யிருநடு வாகப் புல்லிக் | |
|
காய்த்தியிட் டுள்ளம் வெம்பிக் | |
|
கடைந்திடு கின்ற காம | |
|
நீத்துநீர்க் கடலை நீந்தும் | |
|
புணையென விடுத்தல் செல்லார். | |
|
(இ - ள்.) பூத் ததை கொம்பு போன்று - மலர் செறிந்த கொம்பு போன்று; பொன் இழை சுடரும் மேனி - பொன்னணி விளங்கும் மேனியையுடைய; ஏத் தரும் கொடியனாரை - காமன் அம்பைத்தரும் கொடிபோன்றவரை; இரு நடு ஆகப் புல்லி - இடை யிரண்டாகத் தழுவி; உள்ளம் வெம்பிக் காய்த்தியிட்டு - மனம் வெதும்பச் சுட்டு; கடைந்திடுகின்ற காமம் நீத்து நீர்க்கடலை நீந்தும் புணையென - தம் உளத்தைக் கடையும் காம வெள்ளமாகிய நீரினையுடைய கடலை நீந்தும் புணையென (அம்மங்கையரை எண்ணி); விடுத்தல செல்லார் - நீங்கிச் செல்லார்.
|