முத்தி இலம்பகம் |
1585 |
|
|
மாம். வெம்பி - வெம்ப. புணை - தெப்பம். விடுத்தல் செல்லார் : ஒருசொன்னீர்மைத்து.
|
( 206 ) |
2805 |
பொங்கல்வெம் முலைக ளென்னும் | |
|
போதொடு பொருது பூந்தா | |
|
ரங்கலந் தொடையன் மாலை | |
|
கிழிந்தழ கழிய வைகிக் | |
|
கொங்கலர் கோதை நல்லார் | |
|
குரைகட லமிர்த மாகத் | |
|
தங்கலர் பருகி யாரார் | |
|
தாழ்ந்துகண் ணிமைத்தல் செல்லார். | |
|
(இ - ள்.) பொங்கல் வெம் முலைகள் என்னும் போதொடு பொருது - பெருமையும் விருப்பமும் உடைய முலைகளாகிய தாமரை முகைகளுடன் பொருது; அம் கலம் தொடையல் மாலை பூந்தார் - அழகிய கலனணிந்த மார்பிலே, தொடுத்த மாலையாகிய மலர்த்தார்; கிழிந்து அழகழிய - தோற்று அழகழிய; வைகி - (அவர்களுடன்) கூடியிருந்து; கொங்கு அலர் கோதை நல்லார் குரை கடல் அமிர்தம் ஆக - மணம் விரியும் மாலையணிந்த அரம்பையரை, ஒலிக்குங் கடலில் தோன்றிய அமிர்தமாக எண்ணி; தங்கலர் பருகி - விடாமற் பருகி; ஆரார் - மன நிறைவுறாராய்; தாழ்ந்து கண் இமைத்தல் செல்லார் - (அவர்களிடமே) தங்கிக் கண்கள் இமையாராயினார்.
|
(வி - ம்.) பொங்கல் - பெருமை. அழகிய கலத்தினையும் தொடையன் மாலையினையும் உடைய மார்பு என்க. கொங்கு - நறுமணம். குரைகடல் : வினைத்தொகை. ஆரார் - தெவிட்டாராய். தங்கலர் - அமையாராய்.
|
( 207 ) |
2806 |
கருவியின் னிசைக ளார்ப்பக் | |
|
கற்பக மரத்தி னீழற் | |
|
பொருகய லனைய கண்ணும் | |
|
புருவமு மரவஞ் செய்ய | |
|
வரவமே கலைக ளம்பொற் | |
|
கிண்கிணி சிலம்பொ டார்ப்பத் | |
|
திருவனா ராடல் கண்டுந் | |
|
திருவொடு திளைத்து மானார். | |
|
(இ - ள்.) கற்பக மரத்தின் நீழல் - (அவர்கள்) : கற்பக மரத்தின் நீழலிலே (அமர்ந்து); இன்னிசைக் கருவிகள் ஆர்ப்ப - நால்வகையான இனிய இசைக்கருவிகள் ஆர்ப்ப; பொரு
|