முத்தி இலம்பகம் |
1586 |
|
|
கயல் அனைய கண்ணும் புருவமும் அரவம் செய்ய - காதொடு மோதும் கயல் போன்ற கண்களும் புருவமும் மனத்தைக் கலக்க; அரவ மேகலைகள் அம்பொன் கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப - ஒலிக்குரிய மேகலைகளும் அழகிய பொற்கிண்கிணிகளும் சிலம்பும் ஆரவாரிக்க; திருவனார் ஆடல்கண்டும் - திருமகளைப்போன்ற அரம்பையரின் ஆடலைக் கண்டும்; திருவொடு திளைத்தும் ஆனார் - செல்வத்துடனே பிற விளையாட்டுக்களில் ஈடுபட்டும் அமையாராய்,
|
(வி - ம்.) இப் பாட்டுக் குளகம்.
|
கருவி - ஈண்டிசைக் கருவிகள். பொருகயல் - தம்முட் போர் செய்யும் கயற்கெண்டைகள். அரவஞ் செய்ய - மனத்தைக் கலக்க. ”புருவமு முருவஞ்செய்ய” என்றும் பாடம். திருவனார் என்புழித் திரு திருமகள்; திருவொடு என்புழிச் செல்வம் என்க. ஆனார் - அமையார்.
|
( 208 ) |
2807 |
பனிமுகின் முளைத்த நான்கு | |
|
பசுங்கதிர்த் திங்க ளொப்பக் | |
|
குனிமருப் புழுது மேகங் | |
|
குஞ்சரங் குனிந்து குத்த | |
|
வினிதினி னிலங்கு பொற்றோ | |
|
டேற்றுமின் குழைகள் பொங்கத் | |
|
துனிவிலர் களிற்றோ டாடித் | |
|
தொழுதகத் கழிப்பர் வேந்தே. | |
|
(இ - ள்.) வேந்தே! - அரசனே!; பனிமுகில் முளைத்த நான்கு பசுங்கதிர்த் திங்கள் ஒப்ப - வெண்முகிலிடையே முளைத்த நான்கு பசிய கதிர்களையுடைய பிறைத்திங்கள்களைப்போல; குனி மருப்புக் குஞ்சரம் குனிந்து மேகம் உழுது குத்த - வளைந்த கொம்புகளாலே வெள்ளையானை தாழ்ந்து முகிலை உழுது குத்தும் படி; இலங்குபொன் தோடு ஏற்று மின் குழைகள் பொங்க - வீளங்கும் பொன் தோடுடன் பொருந்தி ஒளிவிடும் குழைகள் பொங்கும்படி; துனிவிலர் இனிதினின் களிற்றோடு ஆடி - வெறுப்பிலராய் இனிமையாகக் களிற்றுடன் விளையாடி; தொழுதகக் கழிப்பர் - (பிறர் கண்டு) விரும்பிம்படி பொழுது போக்குவர்.
|
(வி - ம்.) வெள்ளையானைக்கு நான்கு கோடுகள் உண்டு. வெள்ளை யானையை முகிலுடன் பொருமாறு விடுத்து விளையாடுவர்.
|
( 209 ) |
2808 |
கடிகைவா ளார மின்னக் | |
|
கற்பகக் காவு கண்டுந் | |
|
தொடிகவி னறாத மென்றோட் | |
|
டேவியர் சூழ வாம | |
|
|