பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1589 

நோயினுள் பிறத்தல் துன்பம் - நோயைத் தரும் மக்களாயும் விலங்காயும் பிறத்தலும் துன்பம்; மன்னா! - அரசே!; யாவதும் யாக்கை கொண்டவர்கட்குத் துன்பம் என்றான் - எந்த உடம்பெடுத்தவர்கட்கும் துன்பமே என்றான்.

   (வி - ம்.) அணிதிரிந்து அணிகம் ஆயிற்று. பணிகள் செய்வார் : மயன் முதலியோர். 'நாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழை' (முருகு.18) என்றார் பிறரும். இனி, 'ஊர்திகளாகிப் பணிகள் செய்தும்' என்பாருமுளர்; வாகன தேவதைகளாகி என்பதாம். அணிகம் - ஊர்தி.

( 213 )

14. நற்காட்சி

வேறு

2812 கொங்கு விம்மு குளிர்பிண்டிக்
  குழவி ஞாயிற் றெழிலேய்ப்பச்
சிங்கஞ் சுமந்த மணியணைமேற்
  றேவ ரேத்திச் சிறப்பயர
வெங்கு முலக மிருணீங்க
  விருந்த வெந்தை பெருமானார்
தங்கு செந்தா மரையடியென்
  றலைய வேயென் றலையவே.

   (இ - ள்.) கொங்கு விம்மு குளிர் பிண்டி - மணம் விரியும் தண்ணிய அசோகின் நிழலிலே; சிங்கம் சுமந்த மணி அணைமேல் - சிங்கத்தாற் சுமக்கப்பட்ட மாணிக்க அணையின் மேலே; தேவர் ஏத்திச் சிறப்பு அயர - வானவர் வாழ்த்திச் சிறப்புச் செய்ய; குழவி ஞாயிற்று எழில் ஏய்ப்ப - இளஞாயிற்றின் அழகு போல; உலகம் எங்கும் இருள் நீங்க - உலகெங்கும் பொருந்திய இருள் விலக; இருந்த எந்தை பெருமானார் - வீற்றிருந்த எந்தையாகிய பெருமானாரின்; செந்தாமரை தங்கு அடி - செந்தாமரையின்மேல் தங்கின திருவடிகள்; என் தலையவே என் தலையவே - என் தலையிடத்தனவே, என் தலையிடத்தனவே;

   (வி - ம்.) அடுக்கு விரைவுப் பொருட்டு. இருள் - பிற தெய்வங்களைத் தெய்வம் எனக் கருதுதல்.

( 214 )
2813 இலங்கு செம்பொ னெயின் மூன்று
  மெரிபொன் முத்தக் குடைமூன்றும்
வலங்கொண் டலர்தூஉ யடியேத்தும்
  வைய மூன்றும் படைமூன்றும்