பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 159 

அழுந்த அழுந்தி ; படுவெஞ்சுடரின் ஆண்தகை அவிந்தான். - மறையும் வெவ்விய கதிரவன்போல ஆண்தகைமை குறைந்தான்,

 

   (வி - ம்.) ஆண்டகைமை: குணப்பண்பு; 'ஆண்டகைக் குரவிர்' (சீவக. 393) போல. அவிதல் - குறைதல், 'திரைபாடவிய' (அகநா. 260) என்றாற்போல. ஆண்டகையைப் பண்பியாக்கிச் சச்சந்தன் பட்டான் எனின், 'பாலருவி' (சீவக. 291) என்னுங் கவி வேண்டாவாம். இவன் பகைவர் முகம் நோக்கி வீழ்தலின், பிள்ளையார் பின்பு பகை வென்றார்.

 

   இச் செய்யுளின்கண் நச்சினார்க்கினியர் ஆண்டகை என்பதற்குச் சச்சந்தன் என்னாது ஆண்தகைமை என்று பொருள்கூறி அதற்குக் கூறும் விளக்கம் கற்றோரை இன்பத்தில் ஆழ்த்துவதாம். நிலமாமகள் வெம்முலை ஞெமுங்க என்றது, நூலாசிரியர் சச்சந்தன் கழிகாமத்தாற் கெட்டமை கருதிக் கூறியதாம்.

( 260 )

வேறு

 
290 தோய்ந்த விசும்பென்னுந் தொன்னாட் டகந்தொழுது
  புலம்பெய்தி மைந்தர் மாழ்க
ஏந்து முலையாரி னைந்திரங்கக் கொடுங்கோ
  லிருள்பரப்ப வேஎ பாவ
மாய்ந்த குருகுலமா மாழ்கடலி னுண்முளைத்த
  அறச்செங் கோலாய் கதிரினை
வேந்தர் பெருமானைச் சச்சந்தனை மந்திரிமா
   நாகமுடன் விழுங்கிற் றன்றே.

   (இ - ள்.) தோய்ந்த விசும்பு என்னும் தொன்னாட்டகம் - மக்கள் பொருந்திய விண்ணுலகம் என்று பாராட்டப்பட்ட ஏமாங்கதத்திலே; மைந்தர் தொழுது புலம்பு எய்தி மாழ்க - சான்றோர் கைகூப்பித் தனிமையுற்று வருந்த; ஏந்தும் முலையார் இணைந்து இரங்க - மகளிர் துன்புற்றழ; கொடுங்கோல் இருள் பரப்ப - கொடுங்கோல் தன் இருளைப் பரப்ப; வேந்தர் பெருமானை - மன்னர் மன்னனை; சச்சந்தனை - சச்சந்தனை; ஆய்ந்த குருகுலம் ஆம் ஆழ்கடலினுள் முளைத்த அறச்செங்கோல் ஆய்கதிரினை - நல்லதென்று தேர்ந்த குருகுலம் என்னும் ஆழமாகிய கடலில் தோன்றிய அறமாகிய செங்கோலைக்கொண்ட ஆராய்ந்த ஞாயிற்றை; மந்திரி மாநாகம் உடன் விழுங்கிற்று -அமைச்சனாகிய பெரும் பாம்பு அரசுரிமை யெல்லாஞ்சேர விழுங்கியது; ஏஎ பாவம்! - ஐயோ பாவம்!

 

   (வி - ம்.) 'கடலாங் குருகுலம்' சிறப்பு நிலைக்களமாக முதலொடு முதலே வந்த மெய்யுவமம் (தொல். உவம. 4) 'மந்திரி மாநாகம் ' கீழான பொருள் நிலைக்களமாக முதலொடு முதலே வந்த வினையுவமம்' (தொல்.