முத்தி இலம்பகம் |
1592 |
|
|
2816 |
உறுவர்ப் பேண லுவர்ப்பின்மை | |
|
யுலையா வின்பந் தலைநிற்ற | |
|
லறிவர் சிறப்பிற் கெதிர்விரும்ப | |
|
லழிந்தோர் நிறுத்த லறம்பகர்தல் | |
|
சிறியா ரினத்துச் சோ்வின்மை | |
|
சினங்கை விடுதல் செருக்கவித்த | |
|
லிறைவ னறத்து ளார்க்கெல்லா | |
|
மினிய ராத லிதுதெளிவே | |
|
(இ - ள்.) உறுவர்ப் பேணல் - மிக்கோரை விரும்புதல்; உவர்ப்பு இன்மை - வெறுப்பு இல்லாமை ; உலையா இன்பம் தலை நிற்றல் - கெடாத இன்பமாகிய வீட்டை அடையுங் கருத்துத் தம்மிடத்தே நிற்றல்; அறிவர் சிறப்பிற்கு எதிர் விரும்பல் - அறிவற்குச் செய்யும் வழிபாட்டிற்கு எதிர் விரும்புதல்; அழிந்தோர் நிறுத்தல் - கெட்டோரைப் பழைய நிலையிலே நிறுத்தல்; அறம் பகர்தல் - அறத்தைக் கூறுதல்; சிறியார் இனத்துச் சேர்வு இன்மை - இழிந்தோர் குழுவிலே சேராதிருத்தல்; சினம் கை விடுதல் - சினத்தை நீக்குதல்; செருக்கு அவித்தல் - செருக்கைப் போக்குதல்; இறைவன் அறத்துளார்க்கு எல்லாம் இனியர் ஆதல் - அருகன் அறத்திலே ஈடுபட்டார்க்கெல்லாம் இனியராக நடத்தல்; இது தெளிவு - இத்தன்மையே பரமாகமப் பொருளைத் தெளிந்த தெளிவாகும்.
|
(வி - ம்.) உறுவர் - மிக்கோர்; உறு - மிகுதி : உரிச்சொல். உவர்ப்பு - வெறுப்பு. அழிந்தோர் - கெட்டவர். பகர்தல் - கூறுதல். சிறியார் - கயமாக்கள். இறைவனறம் - அருகன் அறம்.
|
( 218 ) |
2817 |
செறியச் சொன்ன பொருடெளிந்தார் | |
|
சேரார் விலங்கிற் பெண்ணாகார் | |
|
குறுகார் நரக மோரேழுங் | |
|
கீழ்முத் தேவர் குழாந்தீண்டா | |
|
ரறியா துரைத்தே னதுநிற்க | |
|
வாறே நரக மாகாத | |
|
பொறியார் போக பூமியுள் | |
|
விலங்குமாவ ரொரு சாரார். | |
|
(இ - ள்.) சொன்ன பொருள் செறியத் தெளிந்தார் - யான் கூறிய பொருளைச் செறிவுறத் தெளிந்தவர்கள்; விலங்கிற் சேரார் - விலங்கொடு கூடார்; பெண் ஆகார் - பெண்ணாகமாட்டார்; நரகம் ஓர் ஏழும் குறுகார் - நரகம் ஏழினையும் அடையார்;
|