(வி - ம்.) நரகம் ஏழாவன; இரத்தினப்பிரபை, சருக்கராப்பிரபை, வாலுகாப்பிரபை, பங்கப் பிரபை, தூமப்பிரபை, தமப்பிரபை, தமத்தமப்பிரபை என இவை, கீழ் முத் தேவராவார் : பவணர், வியந்தரர், ஜ்யோதிஷ்கர், ஆகாத நரகம் ஆறே என்றது முன்பே நரகாயுஷ்யம் கட்டின பின்பு தரிசனங் கொண்டவர், முதல் நரகத்திலே முதற் புரையிலே நரகராயும், விலங்காயுஷ்யம் கட்டின பின்பு தரிசனங்கொண்டவர் போக பூமியிலே விலங்காயும் பிறப்பர் என்றதென்க.
|
( 219 ) |