முத்தி இலம்பகம் |
1594 |
|
|
கொள் மன்னவர் - மாறுகொண்ட வேந்தர்களின்; மெய்புகு பொன் அணி கவசம் ஒப்பன - மெய் சென்று மறையும் பொன்னாலாகிய கவசத்தை ஒப்பனவாய்; வைகலும் - நாடோறும்; மையல் ஐம்பொறி மதம் வாட்டி - உண்ணின்று மயக்கமூட்டும் ஐம்பொறியின் செருக்கையும் வாட்டி; செய்வினை நுணுக்குவ - புறத்துச் செய்யும் தீவினையையும் குறைப்பன.
|
(வி - ம்.) மொய் - வலிமை. ஞாட்பு - போர். முரண் - பகைமை. மையல் - மயக்கம். ஐம்பொறி - மெய்வாய்கண் மூக்குச்செவி. வினை - ஈண்டுத் தீவினை. சீலங்கள் தீவினையைத் தேய்ப்பனவாம் என்பதாம்.
|
( 221 ) |
2820 |
மணித்துண ரனையதங் குஞ்சி வண்கையாற் | |
|
பணித்தனர் பறித்தலிற் பரவை மாநிலந் | |
|
துணித்தொரு துணிசுமந் தனைய திண்பொறை | |
|
யணித்தகு முடியினா யாதி யாகவே. | |
|
|
(இ - ள்.) அணித்தகு முடியினாய்! - அழகிய முடியுடையாய்! மணித்துணர் அனைய - நீலமணியின் கொத்துப் போன்ற; தம் குஞ்சி - தம் சிகையை; வண்கையாற் பறித்தலின் - தம் கையாற் பறித்துக் கொள்வதால்; பரவை மாநிலம் துணித்து - பரப்புடைய இம் மாநிலத்தை இருகூறாக்கி; ஒரு துணி சுமந்த அனைய திண்பொறை - ஒரு கூற்றைச் சுமந்தாற் போன்ற இத்திண்ணிய பொறுமையை; ஆதி ஆகவே பணித்தனர் - முதன்மையாகவே பணித்தார்கள்.
|
(வி - ம்.) ஒரு துணியோடு உவமித்தலின், ஏனைய ஒரு கூறும் இஃது ஒரு கூறுமாகக் கூறினான், அருமையால் என்றுணர்க, 'மணித்துணர் அனைய குஞ்சி' என்பதை, 'மணியனைய துணர்க்குஞ்சி' என்று மாற்றுவர் நச்சினார்க்கினியா.்
|
( 222 ) |
வேறு
|
2821 |
பெரியவாட் டடங்கட் செவ்வாய்ப் | |
|
பிறர்மனை பிழைக்கு மாந்தர் | |
|
மா¦இயவாய்ப் புறஞ்சொற் கூர்முண் | |
|
மத்திகைப் புடையு மன்றி | |
|
யொருவர்வா யுமிழப் பட்ட | |
|
தம்பல மொருவர் வாய்க்கொண் | |
|
டரியவை செய்ப வையத் | |
|
தாண்பிறந் தார்க ளன்றே. | |
|
(இ - ள்.) பெரிய வாள் தடங்கண் செவ்வாய்ப் பிறர்மனை அவாய் மெரீஇ பிழைக்கும் மாந்தர் - பெரிய வாளனைய தடங்
|