| முத்தி இலம்பகம் |
1596 |
|
|
16. தானம்
|
| 2823 |
நன்னிலத் திட்ட வித்தி | |
| |
னயம்வர விளைந்து செல்வம் | |
| |
பின்னிலம் பெருக வீனும் | |
| |
பெறலருங் கொடையும் பேசிற் | |
| |
புன்னிலத் திட்ட வித்திற் | |
| |
புற்கென விளைந்து போக | |
| |
மின்னெனத் துறக்குந் தானத் | |
| |
தியற்கையும் விரித்து மன்றே. | |
|
|
(இ - ள்.) நல் நிலத்து இட்டவித்தின் - நல்ல நிலத்திலே விதைத்த விலைபோல; நயம்வர விளைந்து - விருப்பம் உண்டாக விளைந்து; பின் நிலம் பெருகச் செல்வம் ஈனும் - பிறகு, உலகிலே பெருகும்படி செல்வத்தைத் தருகின்ற; பெறல் அருங் கொடையும் - பெறுதற்கரிய தலைமை பெற்ற கொடையின் இயற்கையையும்; பேசின் - கூறுமளவில்; புல் நிலத்து இட்ட வித்தின் - பொல்லா நிலத்திலே விதைத்த விதைபோல; புற்கென விளைந்து - பொல்லாததாக விளைந்து போகம் மின் எனத் துறக்கும் - இன்பம் நிலைத்து நில்லாமல் மின்போலத் தோன்றி மாய்கின்ற; தானத்து இயற்கையும் - இடைப்பட்ட தானத்தின் இயற்கையையும்; விரித்தும் - (இனி) விரித்துக் கூறுவோம்.
|
|
(வி - ம்.) ”உறக்குந் துணையதோர் ஆலம்வித் தீண்டி
|
| இறப்ப நிழற்பயந்தா அங்கறப்பயனுந் |
|
| தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் |
|
|
வான்சிறிதாப் போர்த்து விடும்” என்றார் நாலடியினும் (38)
|
( 225 ) |
| 2824 |
ஐவகைப் பொறியும் வாட்டி | |
| |
யாமையி னடங்கி யைந்தின் | |
| |
மெய்வகை தெரியுஞ் சிந்தை | |
| |
விளக்குநின் றெரிய விட்டுப் | |
| |
பொய்கொலை களவு காம | |
| |
மவாவிருள் புகாது போற்றிச் | |
| |
செய்தவ நுனித்த சீலக் | |
| |
கனைகதிர்த் திங்க ளொப்பார். | |
|
|
(இ - ள்.) ஐவகைப் பொறியும் வாட்டி - ஐந்து பொறிகளையும் வருத்தி; ஆமையின் அடங்கி - ஆமைபோல அடங்கி;
|