நாமகள் இலம்பகம் |
160 |
|
உவம-5.) தொல்காப்பியனார் சொல்லும் பொருளும் உடன் ஆராய்தலின் உருவகவுவமை யென்றே கூறினார். செங்கோலையுடைய கதிர்; இல்பொருளுவமம்.
|
|
ஏஎ: குறிப்புமொழி. இதனால், அவன் ஆண்டகைமை குறைந்ததற்கு இரங்கினார்.
|
( 261 ) |
291 |
பாலருவித் திங்கடோய் முத்தமா லைப்பழிப்பில் |
|
நெடுங்குடைக்கீழ்ப் பாய்பரி மான்றோ்க் |
|
கோலருவி வெஞ்சிலையான் கூர்வா ளோடுமணிக் |
|
கேடகமு மறமு மாற்றி |
|
வாலருவி வாமனடித் தாமரை மலர்சூடி |
|
மந்திரமென் சாந்து பூசி |
|
வேலருவிக் கண்ணினார்மெய் காப்போம்ப வேந்தன்போய் |
|
விண்ணோர்க்கு விருந்தாயி னானே. |
|
(இ - ள்.) பால்அருவித் திங்கள்தோய் முத்தம்மாலைப் பழிப்புஇல் நெடுங்குடைக்கீழ் - பால்போலுங் கதிர்களையுடைய திங்களைப்போல, முத்துமாலை அணிந்த குற்றமற்ற பெருங்குடையின் நீழலிலே; பாய்பரி மான்தேர் - தாவும் புரவிகள் பூட்டிய தேரில் அமர்ந்து; கோல்அருவி வெஞ்சிலையான் - அம்புகளை அருவிபோல வீசும் கொடிய சிலையினான் (இப்போது அவைகளின்றி) ; கூர்வாளொடு மணிக்கேடகமும் மறமும் ஆற்றி - கூரிய வாளும் கேடகமும் வீரமும் துணையாகப் பொருது; வால்அருவி மந்திரமென் சாந்துபூசி வாமன் அடித் தாமரை மலர்சூடி- அருகனை நினைப்பதாகிய சுக்கிலத் தியானத்திலே முழுகி அருகமந்திரமாகிய சாந்தைப் பூசி அவன் அடிகளாகிய தாமரை மலர்களை அணிந்து; வேல்அருவிக் கண்ணினார் மெய்காப்பு ஓம்ப - வேலனைய கண்ணினையுடைய அரம்பையர் மெய்யைச் சூழ்ந்து காவல் செய்ய; போய் விண்ணோர்க்கு விருந்தாயினான் வேந்தன் - சென்று வானவர் வழிபடுதற்குப் புதியனாயினான் அரசன்.
|
|
(வி - ம்.) தோய் : உவமையுருபு. வேலருவி - வேலொழுங்கு.
|
|
உயிர் நீங்குகின்றபொழுது தியானம் வந்துதவுதலின், வீடு பெற்றான் என்க ; சுவர்க்கமுமாம்.
|
|
இடையறாமையானும் மூழ்கினார்க்கு உலகியற்றுன்பம் மறைந்து குளிர்ந்திருத்தலானும் சுக்கிலத்தியானத்தை ”வாலருவி” என்றார். வாலருவியின்கண் ஆடி என்க. ஓதுங்கால் உள்ளமும் உடலும் குளிர்தலின் வாமன் மந்திரத்தை மென்சாந்தம் என்றார்.
|
( 262 ) |