பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1601 

கொடையின் அளவுக்கேற்றவாறு; புண்ணியம் உயிர் தோய்ந்து - புண்ணியத்தை உயிர் பெற்று; தொக்க நாள்வீந்து - தொகுத்த நாள் கழிந்தபின்; உடம்பு இவண் ஒழியப்போய் - உடம்பை இங்கே ஒழித்துப் போய்; வயிற்றகம் விதியின் எய்தும் - (போக பூமியிலே) ஒரு வயிற்றிலே முறைப்படி அடையும்.

   (வி - ம்.) நச்சினார்க்கினியர். 'உயிரென்றது மேல், இரும்பு போல வாம் பிணியுயிர்' (சீவக. 3111) என்பதனால் ஈண்டு நரகத்திற் சேறற்குரிய இருப்புயிரைக் கூறிற்றாம்' எனக் கொண்டு,

   ”இவ் விருப்புயிர். பல பிறப்பினும் தீவினையென்னும் தீயினுட்கிடந்து காய்ந்தே தீவினைப்பயனாகிய நீரை யுண்ணுதலைக் கெடுத்து, ஈண்டுச் செய்த நற்றானத்தினது அளவாலே உண்டான புண்ணிய நீரை உண்டுபோய்ப் போகபூமியிலே ஒரு வயிற்றகத்தே எய்தும்,”

   என்று தம் வழக்கப்படி சொற்களை மாற்றியமைத்துப் பொருள் கூறுவர்.

( 233 )
2832 திங்கணா ளொன்பதும் வயிற்றிற் சோ்ந்தபின்
வங்கவான் றுகில்பொதி மணிசெய் பாவைபோ
லங்கவ ரிரட்டைக ளாகித் தோன்றலுஞ்
சிங்கினா ரிருமுது குரவ ரென்பவே.

   (இ - ள்.) வயிற்றில் ஒன்பது திங்கள் நாளும் சேர்ந்தபின் - (சேர்ந்த) வயிற்றிலே ஒன்பது திங்களுக்குரிய நாட்களெல்லாம் சேர்ந்திருந்த பிறகு; வங்கவான் துகில் பொதிமணி செய்பாவை போல் - மரக்கலத்திலிருந்து வந்த சிறந்த ஆடையாற் பொதியப் பெற்ற மணிப்பாவை அவ்வாடையினின்றும் புறப்பட்டாற்போல; அங்கு அவர் இரட்டைகள் ஆகித் தோன்றலும் - அவ்விடத்தில் (அவ்வுயிரையுடைய) அவர்கள் இரட்டைப் பிள்ளைகளாய்ப் பிறந்த அளவிலே; இதுமுது குரவர் சிங்கினார். இருமுது குரவராக அவர்களைத் தொடர்பு கொண்டவர்கள்,

   (வி - ம்.) இப் பாட்டுக் குளகம்.

   ஒன்பது திங்கள் நாளும் என மாறுக. வங்கவான் துகில் - மரக்கலத்தின் வாயிலாய் வந்த சிறந்த ஆடை என்பதாம் . இது கருவினைப் பொதிந்துள்ள ஓர் உறுப்பிற்குவமை. மணிசெய்பாவை - மகவிற்குவமை.

   இரட்டை - இரட்டைப் பிள்ளைகள். சிங்கினார் : சிக்கினார் என்பதன் விகாரம்.

( 234 )
2833 இற்றவர் தேவராய்ப் பிறப்ப வீண்டுடல்
பற்றிய விசும்பிடைப் பரவு மாமுகி
றெற்றென வீந்தெனச் சிதைந்து போகுமான்
மற்றவம் மக்கடம் வண்ணஞ் செப்புவாம்.