முத்தி இலம்பகம் |
1602 |
|
|
(இ - ள்.) இற்று அவர் தேவராய்ப் பிறப்ப - இவ்வுடம்பு நீங்க, அவர்கள் வானவர்களாய்ப் பிறப்ப; ஈண்டு உடல் பற்றிய விசும்பிடைப் பரவும் மாமுகில் தெற்றென வீந்தென - ஈண்டிய உடல் வானிடைப் பரவும் பெரிய முகில் தெளிவாக மாயந்தாற் போல; சிதைந்து போகும் - அழிந்து போகும்; மற்ற அம்மக்கள் தம் வண்ணம் செப்புவாம் - இனி அம் மக்களின் வண்ணம் கூறுவாம்.
|
(வி - ம்.) இச்செய்யுளும் உரையும் வேறு பிரதிகளில் கீழ்வருமாறு வேறுபட்டுள்ளன.
|
”இற்றவர் தேவராய்ப் பிறப்ப வீண்டுடம் |
|
பற்றமில் பறவைக ளடையக் கொண்டுபோய்ச் |
|
சுற்றிய பாற்கடற் றுளும்ப விட்டிடும் |
|
பொற்றிரள் வரையொடு மின்னுப் போலவே.” |
|
(இ - ள்.) சிக்கெனக் கொண்டு நின்றவர்கள் தம்முடம்பை நீத்துப் போய்த் தேவர்களாய்ப் பிறப்ப, வரையோடு கூடிய மின்னுப்போல ஈண்டிய வுடம்பைச் சில பறவைகள் எடுத்துக் கொண்டுபோய்ப் பாற்கடலிலே போகடு மென்றானென்க. இச்செய்யுளின் பாடபேதம் பலவென்ப.
|
( 235 ) |
2834 |
பிறந்தவக் குழவிகள் பிறர்கள் யாவரும் | |
|
புறந்தர லின்றியே வளர்ந்து செல்லுநா | |
|
ளறைந்தன ரொன்றிலா வைம்ப தாயிடை | |
|
நிறைந்தனர் கலைகுண முறுப்பு நீரவே. | |
|
|
(இ - ள்.) பிறந்த அக் குழவிகள் - பிறந்த அப் பிள்ளைகள்; பிறர்கள் யாவரும் புறந்தரல் இன்றியே .- புறத்துள்ளார் ஒருவரும் போற்றுதல் இன்றியே; வளர்ந்து செல்லும் நாள் - வளர்ந்து போகும் நாட்கள்; ஒன்றிலா ஐம்பது ஆயிடை - நாற்பத்தொன்பது நாட்களிலே; உறுப்பு கலை குணம் நீர நிறைந்தனர் அறைந்தனர் - உறுப்புக்களும் கலையும் குணமும் நீர்மையுடையவாய் நிறைந்தனர் என்றும் ஆகமத்திலே கூறினர்.
|
(வி - ம்.) குழவியென்னும் விரவுப் பெயரின் பின்வந்த கள்ளீறு ஈண்டு உயர்திணையை உணர்த்துதல், 'கடிசொல் இல்லை' (தொல். எச்ச. 56) என்பதனாற் கொள்க.
|
( 236 ) |
வேறு
|
2835 |
சோலைமீ னரும்பித் திங்கட் | |
|
சுடரொடு பூத்த தேபோன் | |
|
மாலையுங் கலனு மீன்று | |
|
வடகமுந் துகிலு நான்று | |
|
|