பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1613 

புகையும் கொடியும் - பொதிந்த அகிற் புகையும் துகிற் கொடியும் (கொண்டு); நிதியின் கிழவன் இனிது ஆ உறையும் - நிதிக்குரிய குபேரன் இனிமையாக வாழ்கின்ற; பதி பொன் நகரின் படி கொண்டது - அப் பதி பொன் நகரின் தன்மையைக் கொண்டதாகும்.

   (வி - ம்.) செல்வம் மிக்கதாற் குபேரன் பதிபோன்றது . குபேரன் பதி - அளகாபுரி. பொன் நகர் : இந்திரனுடையது.

( 256 )
2855 ஏம மாகிய துப்புர வெய்திய
பூமி மாதில கம்மெனும் பொன்கிளர்
நாம நன்னகர் வீதிக டாமெலாங்
காம வல்லி கிடந்தன போன்றவே.

   (இ - ள்.) ஏமம் ஆகிய துப்புரவு எய்திய - ஆதரவாகிய நுகர் பொருள்களைத் தன்னிடத்தே கொண்ட; பூமி மாதிலகம் எனும் நாம நல்நகர் - பூமி மாதிலகம் என்கிற பெயரையுடைய அழகிய நகரிலே; பொன்கிளர் வீதிகள்தாம் எலாம் - பொன் ஒளிரும் தெருக்கள் யாவும்; காமவல்லி கிடந்தன போன்ற - காமவல்லிகள் கிடந்த அமராவதியின் தெருக்களைப் போன்றன.

   (வி - ம்.) ஏமம் - இன்பமுமாம். துப்புரவு - நுகர்பொருள். பூமிமாதிலகம் எனும் நகரில் பொன்கிளர் வீதிகள் என இயைக்க. தாம் : அசை. காமவல்லி கிடந்தன என்னுந்தொடர் அமராவதியிற் றெருக்கள் என்பதுபட நின்றது.

( 257 )
2856 பைங்கழன் மன்னர் மன்னன்
  பவணமா தேவ னென்பான்
சங்கினுண் முத்த மொப்பாள்
  சயமதி பயந்த நம்பி
யைங்கணைக் காம னன்னா
  னசோதர னரச சீயந்
தங்கிய கேள்வி யாற்குத்
  தையலார்ச் சோ்த்தி னாரே.

   (இ - ள்.) பைங்கழல் மன்னர் மன்னன் பவணமா தேவன் என்பான் - (அந் நகரில் உறையும்) பைங்கழல் அணிந்த வேந்தர் வேந்தன் பவணமா தேவன் என்பானும்; சங்கினுள் முத்தம் ஒப்பாள் சயமதி பயந்த நம்பி - சங்கில் உள்ள முத்தைப் போன்றவளாகிய சயமதி என்பாளும் பெற்ற நம்பி; ஐங்கணைக் காமன் அன்னான் அசோதரன் அரச சீயம் - ஐங்கணை ஏந்திய காமனைப் போன்றவனாகிய அசோதரன் அரசராகிய யானைகட்குச் சிங்கம