| முத்தி இலம்பகம் |
1628 |
|
|
|
பாவத்தையும் இது இவ்வாறு பெரியதாந் தன்மையுடையது என்றும் அஞ்சி; பிறவி நோய் வெருவினான் - (இவற்றை யெல்லாமுடைய) பிறவிப் பிணியை எண்ணி அஞ்சினான்.
|
|
(வி - ம்.) முது புண் : ஒடு என்பர்.
|
|
முதுபுண் என்பதற்கு ஒடு என்றனர் நச்சினார்க்கினியர். தீர்ப்பான் : வினையெச்சம். தன்னிளைமையோடு ஒப்புடைய காமம். உவர்ப்பு - வெறுப்பு. இப்படித்து - இத்தன்மைத்து என்றவாறு. இவற்றையெல்லாம் உடைய பிறவிநோய் என்பதுபடநின்றது. அவனது இளமையைத் தெரித்தோதுவர் ‘நல்லார் வாய்க்கொண்ட அமுதமொப் பான்‘, என்றார்.
|
( 283 ) |
| 2882 |
ஆளியாற் பாயப் பட்ட | |
| |
வடுகளி யானை போல | |
| |
வாளிவிற் றடக்கை மைந்தன் | |
| |
வாய்விட்டுப் புலம்பிக் காம | |
| |
நாளினு நஞ்சு துய்த்தே | |
| |
னச்சறை யாக நன்பொற் | |
| |
றோளியர்த் துறந்து தூய்தாத் | |
| |
தவஞ்செய்வ லடிக ளென்றான். | |
|
|
(இ - ள்.) ஆளியால் பாயப்பட்ட அடுகளி யானைபோல - ஆளியென்னும் விலங்காற் பாயப்பட்ட, கொல்லும் மதமுடைய யானையைப்போல; வாளி வில் தடக்கை மைந்தன் வாய்விட்டுப் புலம்பி - அம்பையுடைய வில்லேந்திய நீண்ட கையானாகிய யசோதரன் வாய்விட்டழுது; நஞ்சு அறையாகக் காம நஞ்சு நாளினும் துய்த்தேன் - நஞ்சிற்கு ஓர் இருப்பிடமாகக் காமமாகிய நஞ்சினை நாள்தோறும் நுகர்ந்தேன்; அடிகள்! - அடிகளே!; நன் பொன் தோளியர்த் துறந்து தூய்து ஆ தவம் செய்வல் என்றான் - அழகிய பொன்னணி புனைந்த தோளியரை நீங்கித் தூயதாகத் தவத்தைச் செய்வேன் என்றான்.
|
|
(வி - ம்.) ‘துய்த்தேன் என்று யானை போலப் புலம்பித் தவஞ் செய்வல் அடிகள் என்றான்‘ எனக்கூட்டுவர் நச்சினார்க்கினியர். தவஞ்செய்தலே தன்கருமமாதலின் தவஞ்செய்வல் எனத் துணிந்தனன் என்பதாம்.
|
( 284 ) |
| 2883 |
சிறுவன்வாய் மொழியைக் கேட்டே | |
| |
தோ்மன்னன் றானுஞ் சொன்னா | |
| |
னுறுகளிற் றுழவ மற்றுன் | |
| |
னொளிமுடித் தாய மெய்தி | |
| |
|