| முத்தி இலம்பகம் |
1631 |
|
|
|
லாகிய பொறி ஒன்று கழலுதலாலே; நம்பன் எல்லாப் பொறிகளும் சோர்ந்து - யசோதரன் தன்னுடைய ஐம்பொறிகளும் புலன்களிலே செல்லும் வேட்கை போக; இல் பொறி இன்பம் நீக்கி - இல்லின்கண் நல்வினையால் நுகரும் இன்பத்தையும் நீக்கி; இராயிரர் சூழச் சென்றான் - இரண்டாயிரம் அரசர்கள் சூழ்ந்து வரத் துறவிலே சென்றான்.
|
|
(வி - ம்.) சோர்ந்து. சோர: எச்சத்திரிபு.
|
|
பொறி - இயந்திரம். பொற்பொறி - அழகிய பொறி. எல்லாப் பொறிகளும் சோர்ந்து என்றது மெய், வாய், கண், மூக்கு, செவீ என்னும் ஐம்பொறிகளும் சோர்ந்து என்றவாறு. இல் - இல்லம். பொறி - ஊழ்.
|
( 288 ) |
| 2887 |
தணக்கிறப் பறித்த போதுந் | |
| |
தானளை விடுத்தல் செல்லா | |
| |
நிணப்புடை யுடும்ப னாரை | |
| |
யாதினா னீக்க லாகு | |
| |
மணப்புடை மாலை மார்ப | |
| |
னொருசொலே யேது வாகக் | |
| |
கணைக்கவி னழித்த கண்ணார்த் | |
| |
துறந்துபோய்க் கடவு ளானான். | |
|
|
(இ - ள்.) தணக்கு இறப் பறித்தபோதும் தான் அளைவிடுத்தல் செல்லா - வாலை இறப்பற்றிப் பறித்த காலத்தும் தான் அளையைக் கைவிடாத; நிணம் புடை உடும்பு அனாரை யாதினால் நீக்கல் ஆகும் - நிணத்தைப் படயிலே உடைய உடும்புபோன்ற வரை யாதொரு வழியாலும் இல்வாழ்க்கையினின்றும் போக்கவியலாது; மணம்புடை மாலை மார்பன் ஒரு சொலே ஏது ஆக மணத்தைக் கூடுதலையுடைய மாலையணிந்த மார்பனாகிய யசோதரன் (முற்பிறப்பின் பயனால்) தந்தை கூறிய ஒரு சொல்லே காரணமாகக் கருதி; கணைக்கவின் அழித்த கண்ணார்த் துறந்து போய் - அம்பின் அழகை அழித்த கண்களையுடைய மகளிரைத் துறந்து சென்று; கடவுள் ஆனான் - முனிவன் ஆனான்.
|
|
(வி - ம்.) தணக்கு - வால். நிணத்தைப் புடையிலேயுடைய உடும்பென்க. மணத்தைக் கூடுதலையுடைய மாலை என்க. இனி. மணப்பு - மணத்தல் எனினும் இழுக்கின்று.
|
( 289 ) |
| 2888 |
தூமமார்ந் தணங்கு நாறுஞ் சுரும்புசூழ் தாரி னானுந் | |
| |
தாமமா ரொலிய லைம்பாற் சயமதித் திருவு மார்ந்த | |
| |
காமமா சுண்ட காதற் கதிர்வளைத் தோளி னாரு | |
| |
நாமநாற் கதியு மஞ்சி நற்றவத் துச்சி கொண்டார். | |
| |
|