| முத்தி இலம்பகம் |
1639 |
|
|
| 2900 |
கொடியணி யலங்கன் மார்பிற் குங்குமக் குன்ற மன்னா | |
| |
னடிபணிந் தருளு வாழி யரசரு ளரச வென்னப் | |
| |
படுசின வெகுளி நாகப் பைத்தலை பனித்து மாழ்க | |
| |
விடியுமிழ் முரச நாண வின்னண மியம்பி னானே. | |
| |
|
|
(இ - ள்.) கொடி அணி அலங்கல் மார்பின் குங்குமக் குன்றம் அன்னான் - ஒழுங்குற அணிந்த மாலையையுடைய மார்பனாகிய குங்குமக் குன்றம் போன்ற சீவகனின்; அடி பணிந்து - அடியை வணங்கி; அரசருள் அரச! வாழி அருள் என்ன - அரசர்க்கரசே! வாழ்க! நினைத்ததை அருள்க என்ன; படுசின வெகுளி நாகப் பைந்தலை பனித்து மாழ்க உமிழ் இடிமுரசம் நாண - உண்டாகும் மிகு சீற்றத்தையுடைய நாகத்தின் படமுடைய தலை நடுங்கி மயங்க இடிக்கும் இடியோசையைப் பிறப்பிக்கும் முரசம் நாணுமாறு; இன்னணம் இயம்பினான் - இவ்வாறு கூறினான்.
|
|
(வி - ம்.) ‘கொடி அணி மார்பு‘ என இயைத்து, வெற்றிக் கொடி எடுத்தற்குக் காரணமான மார்பு எனலுமாம். அருளு : உ : சாரியை. வாழி : அசை எனலுமாம்.
|
( 302 ) |
| 2901 |
ஊனுடைக் கோட்டு நாகான் | |
| |
சுரிமுக வேற்றை யூர்ந்து | |
| |
தேனுடைக் குவளைச் செங்கேழ் | |
| |
நாகிளந் தேரை புல்லிக் | |
| |
கானுடைக் கழனிச் செந்நெற் | |
| |
கதிரணைத் துஞ்சு நாடு | |
| |
வேன்மிடை தானைத் தாயம் | |
| |
வீற்றிருந் தாண்மோ வென்றான். | |
|
|
(இ - ள்.) ஊனுடைக் கோட்டுச் சுரிமுக நாகு - ஊனையுடைய கோட்டினையும் சுரிந்த முகத்தினையும் உடைய நத்தை; ஆன் ஏற்றைச் செங்கேழ் நாகு ஊர்ந்து - (வரம்பிலே துயின்ற) ஆவின் ஏற்றையும் சிவந்த நிறம் பொருந்திய நாகினையும் ஏறி; இளந்தேரை புல்லி - இளந்தேரையையும் தழுவி; தேனுடைக் குவளைக் கழனி - தேன் பொருந்திய குவளைக் கழனியிலே; கானுடைச் செந்நெற் கதிர் அணைத் துஞ்சும் நாடு - காட்டின் தன்மையை உடைய செந்நெற் கதிராகிய அணையிலே துயிலும் நாட்டையும்; வேல் மிடைத் தானைத் தாயம் - வேல் நெருங்கிய படையாகிய தாயத்தையும்; வீற்றிருந்து ஆள் என்றான் - வருத்தமின்றி ஆள்வாயாக என்று கூறினான்.
|