பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 164 

296 பானாட் பிறைமருப்பிற் பைங்கண்வே ழம்பகுவா
  யோர்பையணன் மாநாகம் வீழ்ப்பத்
தேனார் மலர்ச்சோலைச் செவ்வரையின் மேற்சிறு
  பிடிகள்போ லத்துய ருழந்துதா
மானா தடியேம்வந் தவ்வுலகி னின்னடி
  யடைதுமென் றழுதுபோ யினாரெங்
கோனார் பறிப்ப நலம்பூத்த விக்கொடி
   யினிப்பூ வாபிறர் பறிப்பவே

   (இ - ள்.) தேன்ஆர் மலர்ச்சோலைச் செவ்வரையின்மேல் - தேன் நிறைந்த மலர்ச்சோலையையுடைய செவ்விய மலையின்மேல்; பகுவாய் பைஅணல் ஓர்மா நாகம் - பெரிய வாயையும் படத்தையும் கீழ்வாயையும் உடையதொரு பெரும் பாம்பு; பால்நாள் பிறை மருப்பின் பைங்கண் வேழம் வீழ்ப்ப - அரைத்திங்களனைய மருப்பினையும் பசிய கண்ணையும் உடைய களிற்றை வீழ்த்தியதால்; சிறு பிடிகள் போலத் தாம் துயர்உழந்து - (அக்களிறு காத்தற்குரிய) சிறுபிடிகள் அக்காவலை யிழந்து வருந்துமாறுபோலத் தாங்கள் வருந்தி ; எம்கோனார் பறிப்ப நலம்பூத்த இக்கொடி பிறர் பறிப்பப் பூவா - எம் இறைவர் பறிப்பதற்காக அழகினை மலர்ந்த இக்கொடிகள் இனியும் பிறர் பறிக்குமாறு மலரா; அடியேம் வந்து அவ்வுலகில் நின்அடி அடைதும் - (ஆகவே) அடியேங்கள் அவ்வுலகிற்கு வந்து நின் திருவடிகளை அடைவோம் ; என்று ஆனாது அழுது போயினார் - என்று கூறி அமைதியின்றி அழுது நீங்கினர்.

 

   (வி - ம்.) 'சிறுபிடிகள்' எனவே அக்களிறு கூடுதற்குரிய குலத்திற்கு பிறந்த கொடிகள் அல்ல என்பது பெற்றாம். 'இக்கொடி' என்றார் தம்மைப் பிறர்போல. இவர்கள் அரசற்குக் காமம் ஒழிந்த நுகர்ச்சி கொடுத்தற்குரிய [பணி] மகளிர்.

( 267 )
297 செங்கட் குறுநரியோர் சிங்கவேற் றைச்செகுத்தாங்
  கதனிடத்தைச் சோ்ந்தா லொப்ப
வெங்கட் களியானை வேல்வேந் தனைவிற
  லெரியின்வாய்ப் பெய்தவன் பெயர்ந்துபோய்ப்
பைங்கட் களிற்றின்மேல் தன்பெயரி னாற்பறை
  யறைந்தான் வேன்மாரி பெய்தாலொப்ப
வெங்க ணவருமினைந் திரங்கினா ரிருண்மனத்தான்
   பூமகளை யெய்தி னானே.

   (இ - ள்.) செங்கண் சிறுநரி ஓர்சிங்க ஏற்றைச் செகுத்து - சிவந்த கண்களையுடைய சிறுநரி ஒன்று, ஓர் ஆண் சிங்கத்தைக்