பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1640 

   (வி - ம்.) நாகு - நத்தை. சுரிமுகம் : வினைத்தொகை. ஆன் ஏற்றையூர்ந்து என ஒட்டுக. நாகிளந்தேரை : ஒருபொருட்பன்மொழி. கதிரணை : பண்புத்தொகை. தாயம் - அரசுரிமை. ஆண்மோ என்புழி, ‘மோ‘ முன்னிலையசை.

( 303 )
2902 கரும்பலாற் காடொன் றில்லாக்
  கழனிசூழ் பழன நாடுஞ்
சுரும்புலாங் கண்ணி விண்ணோர்
  துறக்கமும் வீடும் வேண்டே
னரும்புலா யலர்ந்த வம்மென்
  றாமரை யனைய பாதம்
விரும்பியான் வழிபட் டன்றோ
  வாழ்வதென் வாழ்க்கை யென்றான்.

   (இ - ள்.) கரும்பு அலால் காடு ஒன்று இல்லாக் கழனி சூழ் பழன நாடு - கரும்பையன்றி வேறு காடு இல்லாத கழனி சூழ்ந்த பழனமுடைய நாட்டையும்; சுரும்பு உலாம் கண்ணி விண்ணோர் துறக்கமும் வீடும் வேண்டேன் - வண்டுகள் உலவும் கண்ணியையுடைய வானோர் துறக்கத்தையும் வீட்டையும் விரும்புகிலேன்; அரும்பு உலாய் அலர்ந்த அம்மென் தாமரை அனைய பாதம் - அரும்பு நெகிழ்ந்து மலர்ந்த அழகிய மெல்லிய தாமரை போன்ற நின் அடிகளை; யான் விரும்பி வழிபட்டு வாழ்வதன்றோ என் வாழ்க்கை என்றான் - நான் விரும்பி வழி பட்டு வாழ்வதே என் வாழ்க்கை என்றான்.

   (வி - ம்.) பழனம் : மருதநிலம். என் வாழ்க்கை நின் பாரதம் வழி பட்டு வாழ்வதாகையால் இவற்றை வேண்டேன் என்றான்.

( 304 )
2903 குன்றென மருண்டு கோல
  மணிவண்டுங் குழாங்கொ டேனுஞ்
சென்றுமொய்த் திமிரும் யானைச்
  சீவகற் கிளைய நம்பி
மன்றல்வீற் றிருந்து மின்னு
  மணிக்குவ டனைய தோளா
னொன்றுமற் றரசு வேண்டா
  னுவப்பதே வேண்டி னானே.

   (இ - ள்.) குன்று என மருண்டு கோலமணி வண்டும் குழாம் கொள் தேனும் - மலையென மயங்கி அழகிய கருவண்டும் குழுவாகிய தேனும்; சென்று மொய்த்து இமிரும் யானை - போய் மொய்த்து முரலும் யானையையுடைய; சீவகற்கு இளைய