| முத்தி இலம்பகம் |
1641 |
|
|
|
நம்பி - சீவகனுக்கு இளவலாகிய நந்தட்டன்; அரசு ஒன்றும் வேண்டான் - அரசைச் சிறிதும் வேண்டாமல்; மன்றல் வீற்றிருந்து மின்னும் மணிக்குவடு அனைய தோளான் - மணம் வீற்றிருந்து ஒளிரும் மணிவரை போன்ற தோளையுடைய சீவகன்; உவப்பதே வேண்டினான் - விரும்புந் துறவையே விரும்பினான்.
|
|
(வி - ம்.) வண்டு, தேன் என்பன வண்டின் வகை. இமிர்தல் - முரலுதல்; இமிர்தற்குக் காரணமான மதநீரையுடைய யானை என்க. இளைய நம்பி - நந்தட்டன். ஒன்றும் - சிறிதும். வேண்டான் : முற்றெச்சம். ளுவப்பது : வினையாலணையும் பெயர். உவக்கப்படுவது என்க; அது துறவு.
|
( 305 ) |
| 2904 |
பொலிவுடைத் தாகு மேனும் | |
| |
பொள்ளலிவ் வுடம்பென் றெண்ணீ | |
| |
வலியுடை மருப்பி னல்லால் | |
| |
வாரணந் தடக்கை வையா | |
| |
தொலியுடை யுருமுப் போன்று | |
| |
நிலப்படா தூன்றின் வைவேற் | |
| |
கலிகடிந் துலகங் காக்குங் | |
| |
காளையைக் கொணர்மி னென்றான். | |
|
|
(இ - ள்.) இவ்வுடம்பு பொலிவு உடைத்தாகுமேனும் பொள்ளல் என்று எண்ணி - இவ்வுடம்பு மேலே தோற்றப் பொலிவையுடையதேனும் உள்ளே உறுதியுடைத்தன்று என்று நினைத்து; உருமுப்போன்று ஒலியுடை வாரணம் - இடிபோன்ற ஒலியையுடைய களிறு; நிலப்படாது - நிலத்தில் வீழாமல்; வலியுடை மருப்பின் அல்லால் தடக்கை வையாது - தன்னைத் தாங்கும் வலியையுடைய மருப்பிலே அல்லாமல் தன் துதிக்கையை வையாது; ஊன் தின் வைவேல் கலிகடிந்து உலகம் காக்கும் - பகைவருடைய ஊனைத் தின்னும் கூரிய வேலால் வறுமையை நீக்கி உலகத்தைக் காக்கின்ற; காளையைக் கொணர்மின் என்றான் - சச்சந்தனைக் கொண்டு வருக என்றான்.
|
( 306 ) |
| 2905 |
கழுமணி யார மார்பிற் | |
| |
காவலன் மக்கள் காய்பொ | |
| |
னெழுவளர்ந் தனைய திண்டோ | |
| |
ளிளையவர் தம்முண் மூத்த | |
| |
தழுமலர்க் கொம்பு போலுந் | |
| |
தத்தைநாட் பயந்த நம்பி | |
| |
விழுமணிப் பூணி னானை | |
| |
வீற்றிரீஇ விதியிற் சொன்னான். | |
|